பஞ்சாயத்தில் நடக்க போவது என்ன? அண்ணா சீரியல் இன்றைய எபிசோட்!
சென்னை: நேற்றைய எபிசோடில், சண்முகம், சனியனின் பேரனை கடத்த திட்டம் போட்டு அவனை கடத்தி விடுகிறான். ஸ்கூலில் ரத்னா வெளியே வர சனியனை பார்த்து இன்னும் நீங்க போகலையா என்று கேட்க அவன் இன்னும் என் பேரன் வரல என்று சொல்ல, எல்லாரும் போய்ட்டாங்களே, நான் கதவையெல்லாம் பூட்டிட்டு தான் வந்திருக்கேன் என்கிறாள்.
இதையடுத்து, வீரா உங்க பேரனை யாரோ இரண்டு சாமியார் கூட ஐஸ் கிரீம் சாப்பிட்டுட்டு இருந்தான், புதுசா இருக்கவே போட்டோ எடுத்தேன் என்று சொல்லி அந்த போட்டோவை காட்ட சனியன் ஷாக் ஆகிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போது என்ன பார்க்கலாம்.

கார்த்திகை தீபம்: இன்றைய எபிசோடில், சனியன் பேரனை காணவில்லை என்று தேடிக்கொண்டு இருக்க அங்கு வரும் பரணி என்னாச்சு என்று கேட்க சனியன் என் பேரனை காணவில்லை என்று சொல்ல சண்முகம் கிட்ட சொன்னா அவன் உதவி பண்ணுவான் என்று சொல்கிறாள். நீங்க சண்முகம் கிட்ட உதவி கேட்பீங்களா என்று கேட்க என் பேரனுக்காக உயிரையே கொடுப்பேன் என்று சொல்ல சனியனை சண்முகத்திடம் அழைத்துச் செல்கின்றனர். சண்முகம், உடன்குடி, வெட்டுக்கிளி என மூவரும் சேர்ந்து சீட்டு விளையாடிக் கொண்டிருக்க சனியன் ஓடி வந்து உதவி கேட்க சண்முகம் அவனுங்களா மோசமானவங்களாச்சே.. பேரனை கொன்னுடுவானுங்க என்று சொல்ல சனியன் அழுகிறான்.
சௌந்தரபாண்டியன் அட்ராசிட்டி: பிறகு உன் பேரனை நான் காப்பாத்துறேன் என்று சண்முகம் கிளம்ப சூடாமணி தடுத்து நிறுத்தி என் புள்ளைங்க கஷ்டப்பட இவனும் ஒரு காரணம். இவனோட பேரனை நீ எதுக்கு காப்பாத்தணும் என்று சொல்ல சனியன், சூடாமணியிடம் மன்னிப்பு கேட்டு கெஞ்சுகிறான். அதன் பிறகு என் அம்மா உத்தமினு இந்த ஊர் பஞ்சாயத்துல எல்லார் முன்னாடியும் சொன்னா நான் உன் பேரனை காப்பாத்துவேன் என்று சொல்கிறான். சனியன் சம்மதம் சொல்ல பிறகு பஞ்சாயத்து கூட சௌந்தரபாண்டி மண்ணெண்ணெய் கேனுடன் பஞ்சாயத்துக்கு வருகிறார்.
உண்மைய நிரூபிக்கலனா சூடாமணி கொளுத்திப்பேனு சொன்னாலே அதுக்குத்தான் மண்ணெண்ணெய் கேனுடன் வந்திருப்பதாக சௌந்தரபாண்டி சொல்கிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











