உயிருக்கு போராடும் பாக்கியம்.. ஆத்திரத்தில் சண்முகம் செய்த செயல்.. அண்ணா சீரியல் இன்றைய எபிசோட்!
சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா, சண்முகத்தின் அப்பா, இனி சூடாமணி வெளியே வர மாட்டாள் என்று வருத்தப்பட்டு கண்ணீர் விட்டு கலங்க இதை பார்த்த சண்முகம் கோபமாகி அரிவாளை எடுத்துக் கொண்டே சௌந்தரபாண்டி வீட்டை நோக்கி வருகிறான்.
மறுபக்கம், சூடாமணி இறந்து விட்டது போல் தகவல் பரவ, பாண்டியம்மா என்னமோ நிரூபிக்கணும்னு சொன்னா ஆனால் ஒண்ணுமே நடக்காமல் செத்து போயிட்டா என்று சந்தோசப்பட சூடாமணி அலறி எழுந்து கொண்டு எழுந்திருக்கிறாள். இதையடுத்து அது கனவு என்று தெரிய வருகிறது. இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

அண்ணா சீரியல்: இதையடுத்து சூடாமணி நான் நிரூபிக்க வேண்டியது நிறைய இருக்கு அது எல்லாமே நடக்கணும். குறிப்பாக அந்த சௌந்தரபாண்டி தான் நகையை திருடியதுனு நிரூபிக்கனும், 20 வருஷமா பிரிந்து இருக்கிற என் பிள்ளைகளோடு சேர்ந்து இருக்கனும் என்று வேண்டுகிறாள். அதன் பிறகு ஷண்முகம் ஆவேசமாக வந்து சௌந்தரபாண்டியை குத்த போக பரணி தடுக்க முயற்சி செய்ய ஒரு கட்டத்தில் பாக்கியம் குறுக்கே வந்து நிற்க ஷண்முகம் சௌந்தரபாண்டியை குத்த போய் கடைசியில் கத்தி பாக்கியத்தின் வயிற்றில் இறங்குகிறது.
காணத்தவறாதீர்கள்: இதனால் பரணி பதறி போக முத்துப்பாண்டி அம்மாவுக்கு கத்திக்குத்து நடந்ததும் இதுவரை காட்டாத பாசத்தை காட்டி குழந்தை போல் கலங்கி நிற்கிறான், உன்னை சாக விட மாட்டேன் மா என்று துடிதுடிக்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











