விலகும் மர்மம்.. ஸ்ரீகாந்த் மரணத்தில் கிடைக்கும் ஆதாரம் - கெட்டி மேளம் இன்றைய எபிசோட் அப்டேட்
சென்னை: கெட்டிமேளம் சீரியலில் நேற்றைய எபிசோடில் மீனாட்சி, ஜெகனிடம் லாரி டிரைவரை ஒப்படைத்து இவன் வெளியே வரவே கூடாது, இவன் கதையை முடித்துவிடு, இவன் வெளியில் வந்தால், வெற்றி கொலை வழக்கில் இருந்து தப்பித்துவிடுவான் என சொல்கிறாள். அதோடு மட்டுமில்லாமல் குழந்தை தியாவின் கதையை முடித்துவிடு அதற்கான சரியான சந்தர்ப்பத்தை நான் உருவாக்கி தருகிறேன் என சொல்கிறாள். மேலும், இந்த லாரி டிரைவரை விட்டுவிடாதே, இவன் வெற்றியிடம் எல்லாத்தையும் சொல்லிவிட்டால் நாம போட்ட திட்டம் எல்லாம் வீணாகிவிடும் என சொல்லிவிட்டு மீனாட்சி அங்கிருந்து கிளம்புகிறாள்.
இதையடுத்து, வீட்டில் தியாவிற்கு பிறந்த நாளை கொண்டாடிவிட்டு, அனைவரும் கோவிலுக்கு செல்கின்றனர். இதைத்தெரிந்து கொண்ட மீனாட்சி ஜெகனுக்கு போன் செய்து தியாவை கடத்துவதற்கு இது தான் சரியான நேரம் என்று சொல்ல, ஜெகன் தியாவை கடத்துவதற்கான செல்கிறான். மற்றொரு பக்கம் மயக்கத்தில் இருந்த லாரி டிரைவருக்கு மயக்கம் தெளிந்து அவன் அங்கிருந்து தப்பித்து விடுகிறாள்.

கெட்டி மேளம்: கோவில் வெற்றி, துளசி, தியா என அனைவரும் சாமி கும்பிட்டுக்கொண்டு இருக்க, ஜெகன் தியாவிற்கு பலூனை காட்டி அழைக்க அவளும், ஜெகனை பார்த்து ஓடிவருகிறாள். இதையடுத்து ஜெகன், தியாவை காரில் கடத்தி சென்றுவிடுகிறான். கோவிலில் தியாவை காணாமல் தேட, வெற்றிக்கு கோர்ட்டில் ஆஜராக வேண்டிய நேரம் வருகிறது. இதனால்,வெற்றி தனது நண்பர்களை வரவைத்து துளசியுடன் சேர்ந்து குழந்தையை தேட சொல்கிறான். அஞ்சலி உள்ளிட்டோரும் தியாவை தேடி அலைகின்றனர்.
சிக்கிய ஆதாரம்: இந்த சமயத்தில் தான் பறவைகளை போட்டோ எடுக்கும் போட்டோகிராபருக்கு ஸ்ரீகாந்த் விபத்து சம்மந்தமாக ஒரு ஃபுட்டேஜ் கிடைக்கிறது. அதில், விபத்தை ஏற்படுத்தியது வெற்றி இல்லை ஸ்ரீகாந்த் குடும்பத்தை சேர்ந்த ஜெகன் தான் என்பது தெளிவாக தெரிவதால், அவர் அந்த வீடியோவை வெற்றியின் நண்பனுக்கு ஃபோன் செய்து, அந்த வீடியோவை அவர்களுக்கு அனுப்பி வைக்கிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கெட்டி மேளம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறா


Click it and Unblock the Notifications











