அஞ்சலிக்கு தொல்லை கொடுக்கும் மகேஷ்.. அடுத்து நடக்கப்போவது என்ன? கெட்டி மேளம் !
சென்னை: கெட்டி மேளம் சீரியல் சனிக்கிழமை எபிசோடில், லட்சுமி, சுப்பிரமணி மற்றும் சத்யா அடிக்கடி வீட்டுக்கு வந்து போறது எனக்கு சரியா படல என சொல்லிக் கொண்டிருக்க சத்யா இதை கேட்டுவிட்டு நான் குடிச்சிட்டு என்னமோ பேசி இருப்பேன் அதனால அந்த அம்மா என்னை இப்படி சொல்லுது. நீ என்னமோ பெருசா பண்ணியிருக்க என்று சுப்பிரமணியை கலாய்க்கிறான். அடுத்ததாக மகேஷ் வீட்டுக்கு வந்து அஞ்சலியை செக்கப் அழைத்து செல்வதாக சொல்ல அஞ்சலி அவனுடன் செல்ல மறுக்கிறாள். பிறகு லட்சுமியை சந்திக்கும் மகேஷ் இப்போ அஞ்சலி என் கூட வரலைன்னா திரும்பவும் கோர்ட்டு கேஸ்-னு அலைய விடுவேன் இன்று எச்சரிக்க லட்சுமி போய்ட்டு வந்துட்டு என சொல்கிறாள்.

இதையடுத்து இன்றைய எபிசோடில்,மகேஷ் சத்யாவிடம் உன்ன பாத்தாலே கோவமா வருது, நானும் அஞ்சலியும் இப்போ செக்கப் போவோம், அவ உன்னை வர சொன்ன முடியாது என்று சொல்லு, அதைவிட்டுவிட்டு நானும் வரேன் என்று சொல்ல, அவ்வளவு தான் கொன்றுவிடுவேன் என்று சொல்கிறான். இதைக்கேட்டு சத்யா, இவ்வளவு நேரம் எனக்கு வரவேண்டும் என்ற எண்ணம் வரவில்லை. ஆனால், நீங்க மிரட்டுனதுக்கு அப்புறம் நிச்சயம் நானும் வருவேண் என்று சொல்கிறான்.
கெட்டிமேளம்: பின் அஞ்சலி உங்க கூட நானும் வரட்டுமா என்று கேட்க, வாங்க சத்யா நானே கூப்பிட வேண்டும் என நினைத்தேன் என்று சொல்ல மகேஷ் ஆத்திரப்படுகிறான். பின் போகும் இடம் எல்லாம், அஞ்சலி, நீ ஜூஸ் குடிக்க வேண்டும், அதைசாப்பிடு இதை சாப்பிடு என்று மகேஷ் தொல்லை செய்ய அஞ்சலி ஆத்திரப்படுகிறாள். பின் வீட்டுக்கு வரும் அஞ்சலி, என்னால நிம்மதியாவே வாழ முடியல, இந்த மகேஷ் என்னை இப்படி கொடுமைப்படுத்துகிறான் இது என்ன வாழ்க்கை என வருத்தப்படுகிறாள். இதைப்பார்த்த சுப்புரமணி, இந்த மகேஷ் உயிரோடு இருக்கும் வரைக்கும் அஞ்சலி நிம்மதியாவே இருக்க முடியாது என மனதிற்குள் நினைத்து ஒரு திட்டத்தை போகிறார். இப்படியான நிலையின் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கெட்டி மேளம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











