சிவராமன் கொடுத்த ஐடியா.. அஞ்சலியின் புதிய பிஸ்னஸ்..கெட்டி மேளம்!
சென்னை: மீனாட்சி பற்றி அனைத்தையும் தெரிந்து கொண்ட கதிர் அதிர்ச்சி அடைகின்றனர்.அதை தொடர்ந்து மீனாட்சிக்கு துளசியை ரூமுக்குள் அடைத்து வைத்த பெண்ணிடம் இருந்து ஃபோன் வர மீனாட்சி அவளை சென்று சந்திக்க கதிர், பின் தொடர்ந்து செல்கிறான். துளசியை அவமானப்படுத்தியது மீனாட்சி தான் என்ற உண்மை கதிருக்கு தெரிய வருகிறது. இதையடுத்து துளசியை சந்தித்த கதிர் நடந்த விஷயங்களை சொல்ல இது எல்லாம் எனக்கு ஏற்கனவே தெரியும். குடும்பம் பிரிந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் அமைதியாக இருந்ததாக சொல்கிறாள்.
இதையடுத்து, கதிர் நீ அந்த வீட்ல தான் இருக்கணும் என்று சொல்கிறான். இதைக்கேட்ட அடுத்த நாள் துளசி வீட்டை காலி செய்து கொண்டு ஈஸ்வரமூர்த்தி வீட்டுக்கு வந்து நிற்க அபிராமி அவளை ஆரத்தி எடுத்து வரவேற்க மீனாட்சி துளசியின் வருகையால் அதிர்ச்சி அடைகிறாள். மறுபக்கம், சிவராமனை பிடிக்க ஏஜென்ட் ரயில்வே ஸ்டேஷன் பைக் பார்க்கிங்கில் நோட்டமிட தொடங்கிய நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

கெட்டி மேளம்: அதாவது சிவராமன் தனது நண்பனிடம் பார்க்கிங் வரைக்கும் சென்று வரலாம் என்று சொல்கிறார். ரொம்ப நாளா வண்டி பார்க்கிங்ல இருக்கு, அதுல வண்டி சம்பந்தமான ஒரு முக்கியமான டாக்குமெண்ட் இருக்கு என்று சொல்கிறார். திடீரென மகேஷ் நோட்டமிடலாம் என்ற சந்தேகம் எழுந்து சத்யாவை அனுப்பி வண்டியை எடுத்து விடுகின்றனர். இந்த விஷயம் அறிந்த மகேஷ் கடுப்பாகிறான். பிறகு அஞ்சலியிடம் அந்த எஞ்சின் சீக்ரெட் குறித்த டாக்குமெண்டை சிவராமன் கொடுத்ததாக கொடுக்கிறார்.
சிவராமன் கொடுக்கும் ஐடியா: அந்த அவை அம்மாவிடம் கொடுத்து அப்பா கொடுத்ததாக சண்முகம் அங்கிள் தந்ததாக சொல்கிறாள். மேலும் அந்த டாக்குமெண்ட் படி ஒரு இன்ஜினை வடிவமைக்க அது பயங்கர வேகமாக ஒர்க் ஆகிறது. இந்த விஷயத்தையும் அம்மாவிடம் சொல்லும் அஞ்சலி ஒரு இன்வெஸ்டரை பிடித்தால் பிசினஸ் வெற்றி கண்டு விடலாம் என்று சொல்லி சந்தோஷப்படுகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கெட்டி மேளம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











