ஓவர் ஆட்டிடியூட் காட்டிய பல்லவி..கார்த்திக்கிடம் கோபமான தீபா.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!

சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில், தீபா பல்லவியின் ரூமுக்கு வந்து, நீ யாரு எதற்கு வந்து இருக்க என்று கேட்கிறாள்.

தீபாவை சென்டிமெண்டா தான் பேசி கவிழ்க்க முடியும் என்று தெரிந்து கொண்ட பல்லவி, என் தம்பிக்கும் உடம்பு சரியில்லை இதனால், தான் இங்கே நடிக்க வந்து இருக்கிறேன் என்று சொல்கிறாள். இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

zee tamil television Karthigai Deepam serial December 15th full episode

இன்றைய சீரியல்: கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய எபிசோடில், அனைவரும் ஹாலில் உட்கார்ந்திருக்க ஐஸ்வர்யா பல்லவியை வைத்து ஏதாவது செய்யலாம் என்று பிளான் போட்டு காபியை அவளிடம் கொடுத்து எல்லாருக்கும் எடுத்திட்டு போய் கொடு, சும்மா இருந்ததால் செய்ததாக சொல்லு என்கிறாள். இதையடுத்து அனைவருக்கும் பல்லவி காபி கொடுக்கிறாள்.

பிளான் போட்ட ஐஸ்வர்யா: இதையடுத்து, கார்த்திக் நீங்க எதுக்கு இதையெல்லாம் செய்யறீங்க என்று கேள்வி எழுப்ப இல்ல வீட்டில சும்மா தானே அதன் எதாவது வேலை செய்யலாம் என்று காபி போட்டேன் என்கிறாள். உடனே கார்த்திக் நீங்க எங்கவீட்டுக்கு வந்து இருக்கும் கேஸ்ட், உங்களுக்கு எதுக்கு கஷ்டம் என்று சொல்ல எனக்காக நீங்க எவ்வளவு பெரிய உதவி செய்யறீங்க, உங்களுக்காக நான் இதை கூட செய்ய மாட்டேனா என்று பேசி அங்கிருந்து வருகிறாள்.

வார்னிங் கொடுத்த தீபா: இதை பார்த்த தீபாவும் மீனாட்சியும் பல்லவியை வழி மறித்து நீ எதுக்கு இந்த வேலையெல்லாம் செய்துட்டு இருக்க? பாட வந்த நீ அந்த வேலையை மட்டும் பார்த்திட்டு கிளம்பு என சொல்கின்றனர். இல்ல ஐஸ்வர்யா அக்கா காபி போட நின்னுட்டு இருந்தாங்க. அவளுக்கு காபி போட தெரியாதுன்னு சொன்னாங்க. நான் தீபா கிட்ட சொல்ல வேண்டியது தானே என்று கேட்க அவங்க தீபா கிச்சனுக்குள் வர கூடாதுனு கண்டிஷன் இருக்கு சொன்னதால் நான் காபி போட்டேன் என்று சொல்ல, உடனே குறுக்கிட்ட தீபா,அதெல்லாம் இப்போ இல்ல, நீ உன் வேலையை மட்டும் பார்த்துட்டு கிளம்பு என வார்னிங் கொடுக்கிறாள்.

கார்த்திக்கிடம் சண்டை: அதன் தொடர்ச்சியாக கார்த்தியின் ரூமுக்குள் வரும் தீபா உங்க கிட்ட பேசணும், பல்லவி எப்போ போவா? அவளுக்கு எப்போ ரெக்கார்டிங் என்று மிரட்டலாக கேட்க கார்த்திக் என்னங்க மிரட்டுறீங்க என்று கேட்கிறான். இல்ல அவ அம்மாவை பார்க்கணும் போல இருக்குனு சொல்லிட்டு இருக்கா என்று சொல்ல 1 வாரம் ஆகுமே என்று கார்த்திக் பொய் சொல்லி விளையாட தொடங்க தீபா நாளைக்கு தானே ரெக்கார்டிங் அப்புறம் எதுக்கு ஒரு வாரம் என கோபப்பட இப்படி ஏதாவது நடந்தா தான் பொண்டாட்டி மாதிரி நடந்துக்கிறீங்க. இப்படியே இருங்க இது தான் நல்லா இருக்கு என்று சொல்லி வெளியே செல்ல பல்லவி எப்போ போவான்னு சொல்லிட்டு போங்க என்று திரும்பவும் அதட்ட நாளைக்கு கிளம்பிடுவாங்க என்று சொல்கிறான்.

அடுத்து நடப்பது என்ன: மறுபக்கம் ஐஸ்வர்யா நாளைக்கு எப்படி நடந்துக்கணும், எப்படி பாடணும் என பல்லவிக்கு ஏதோ சொல்கிறாள். இளையராஜா கார்த்திக்கு போன் செய்து நாளைக்கு ஏற்பாடு பண்ணிடலாமா? பல்லவி வந்துடுவாங்களா? என்று கேள்வி கேட்க கார்த்திக் ஏற்பாடுகள் செய்ய சொல்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X