தீபாவின் கச்சேரிக்கு வரும் சிக்கல்.. மாஸ் காட்டிய கார்த்திக்.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!

சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில், இன்றைய எபிசோடில், தீபாவின் கச்சேரிக்காக ஒட்டியிருந்த போஸ்டரை ரவுடிகள் கிழித்து கொண்டிருக்க இளையராஜா இதை பார்த்து விடுகிறான். அதன் பிறகு அவன் ரவுடிகளிடம் எதுக்கு போஸ்டரை கிழிக்கிறீங்க என்று கேட்க அவனையும் அடித்து விடுகின்றனர். உடனே இளையராஜா கார்த்திக்கிற்கு இந்த விஷயத்தை தெரியப்படுத்துகிறான். இதனால் கடுப்பாகும் கார்த்திக் ரவுடிகளிடம் சண்டை போடுகிறான்.

அபிராமிக்கு தெரிந்த நண்பர் ஒருவர் இதை வீடியோ எடுத்து அபிராமிக்கு அனுப்பி என்ன உன் பையன் இப்படி சண்டை போடுறான் என்று கேட்கிறாள். இதனால் அபிராமி இதை அவமானமாக நினைத்து அருணாச்சலத்திடம் கார்த்திக்கிற்கு எதுக்கு இந்த வேலை? ஏன் இப்படி பண்ணிட்டு இருக்கான் என சொல்லி வருத்தப்பட்டு தீபாவை திட்ட தீபா கண் கலங்குகிறாள். இதையடுத்து நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

zee tamil television Karthigai Deepam serial february 13th episode

கச்சேரிக்கு வரும் சிக்கல்: இதையடுத்து கார்த்திகை தீபம் இன்றைய எபிசோடில், நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்திருந்த சபாவின் மேனேஜர் உங்களுடைய பாட்டுக் கச்சேரியை இங்கு நடத்த முடியாது என சொல்கிறார். உடனே இளையராஜா மற்றும் கார்த்திக் சபாவிற்கு வந்து ஏன் நடக்க முடியாது என்ன விஷயம் என்று கேட்க பில்டிங் ரொம்ப மோசமான கண்டிஷனில் இருப்பதால் பாட்டு கச்சேரி நடக்கும்போது அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக கூறுகிறார்.

தர்ணா போராட்டம்: இதனால் கார்த்திக் தன்னுடைய ஆபீஸில் வேலை செய்பவர்களை கூப்பிட்டு சபா முன்பு உட்கார்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தீயாகப் பரவ ஐஸ்வர்யா அபிராமியிடம் காட்ட அபிராமி கார்த்திக் எதுக்கு இப்படி எல்லாம் பண்ணிக்கிட்டு இருக்கணும் என்று கடுப்பாகிறாள். உடனே போலீசும் அங்கு வந்துவிட கார்த்திக் நான் எங்க கச்சேரி நடத்துவதற்காக அட்வான்ஸ் எல்லாம் கொடுத்து புக் பண்ணி இருக்கேன் ஆனா கடைசி நிமிடத்தில் இங்கு கச்சேரி நடத்தக்கூடாதுன்னு சொல்றாங்க அத பத்தி நீங்களே கேளுங்க என்று ஆதாரங்களை கொடுக்க மேனேஜர் அதிர்ச்சி ஆகிறார்.

பிளான் ஒர்க் அவுட் ஆகல: கார்த்திக் பில்டிங் எஞ்சினியரை வர சொல்லுங்க என்று கூப்பிட மேனேஜர் அதெல்லாம் வர சொல்ல முடியாது என்று சொல்கிறார் சரி ஓனருக்கு போன் போடுங்க என்று சொல்ல அவர் கார்த்தி தனியாக கூட்டிச்சென்று நீங்க புக் பண்ண மாதிரி கச்சேரி நடத்துங்க பிரச்சனை வேண்டாம் என்று சொல்கிறார். மேலும் ரூபஸ்ரீக்கு ஃபோன் செய்து நீங்கள் கொடுத்த பணத்தை திருப்பி கொடுத்து விடுகிறேன் உங்களுடைய பிளான் ஒர்க் ஆகல, இங்கே கார்த்திக் சொன்ன மாதிரி கச்சேரி நடக்கும் என சொல்கிறார்.

மறுபக்கம் அபிராமி கார்த்தியை நினைத்து புலம்ப அருணாச்சலம் அவன் எதுக்கு இப்படி பண்ணிக்கிட்டு இருக்காங்க தெரியல முழுசா உண்மை தெரிஞ்சதும் அது பத்தி பேசுவோம் என்று சொல்லி விடுகிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X