சிதம்பரத்திற்கு நடந்த அவமானம்.. கார்த்திக் கொடுத்த செம ட்விஸ்ட்.. கார்த்திகை தீபம் சீரியல் !
சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில் நேற்று. சவுண்டு எஞ்ஜினியர், கார்த்திக்கிடம் சிதம்பரம், பல்லவியை மிரட்டி பாடவைத்தார் என்ற உண்மையை சொல்ல, கார்த்திக்கிற்கு பல்லவி மீது இருந்த கோபம் குறைகிறது.
இதையடுத்து, வடநாட்டு கம்பெனி மீட்டிங் தொடங்குகிறது. இதில் சிதம்பரம் கலந்து கொண்டு கார்த்திக் வர வாய்ப்பே இல்லை என்று சொல்லி கொண்டிருக்க மாஸ் என்ட்ரி கொடுக்கிறான் கார்த்திக். இப்படியான நிலையில் இன்று என்ன நடக்கப்போகிறது என்பதை பார்க்கலாம்.

அவமானமடைந்த சிதம்பம்: கார்த்திக்கை தீபம் இன்றைய சீரியலில், மீட்டிங்கிற்கு வரும் கார்த்திக் பல்லவி எனக்காக தான் பாடி இருக்காங்க என்று சொல்ல சிதம்பரம் அது எப்படி பாடுவாங்க அவர் எனக்காக பாடி கொடுத்திருக்கா என்று சொல்கிறார். உடனே, கார்த்திக் இல்ல எனக்காக தான் பாடி இருக்கா என்று பாடலை எடுத்துக்காட்ட சிதம்பரம் அதிர்ச்சி அடைகிறார். உடனே சிதம்பரம் இது என்னுடைய பாடல், உன்கிட்ட எப்படி வந்தது என்று சொல்லி வாக்குவாதம் செய்கிறார். உடனே அங்கிருந்தவர்கள் உங்கள் பாடல் என்றால் எடுத்துக்காட்டுங்க என்று சொல்ல, சிதம்பரமும் பாட்டை ப்ளே செய்கிறான். ஆனால், அதில், காமெடி பாடல் ஒட அதிர்ச்சி அடையும் சிதம்பரம் அவமானத்தோடு அங்கிருந்து வெளியேறுகிறார்.

கார்த்தியின் மாஸ்டர் பிளான்: உடனே சவுண்ட் இன்ஜினியரிடம் வேறு காப்பி இருக்கா என்று கேட்க நீங்க தானே சார் ஒரிஜினல் காப்பிய தவிர வேற எதுவும் இருக்க கூடாதுன்னு டெலிட் பண்ண சொல்லிட்டீங்க என்று சொல்கிறார். அதன் பிறகு கார்த்திக் வெளியே வர எப்படிடா இதெல்லாம் நீ பண்ண, நான் கெட்டவன் எந்த எல்லைக்கும் போலாம் நீ நல்லவன், நீ எதுக்கு இப்படி பண்ண என்று கேட்கிறார். உடனே கார்த்திக் நீங்க பண்ணும் போது நான் கொஞ்சம் பண்ண கூடாதா என்று பதிலடி கொடுக்கிறான்

சவால் விட்ட சிதம்பரம்: அதன் பிறகு சிதம்பரம், பல்லவி வேணா உனக்கு பாடி கொடுத்திருக்கலாம் ஆனால் பல்லவி உன் பக்கத்திலேயே வந்து நின்னா கூட உனக்கு யாருனு தெரியாது. அவள நான் பார்த்திருக்கேன் என்று சொல்ல தீபா அதிர்ச்சி அடைகிறாள். உடனே கார்த்திக் இன்னும் 12 நாளில் பல்லவி யார் என்பதை கண்டுபிடித்து உங்க நேரில் நிறுத்துகிறேன் என்று சொல்ல சிதம்பரம் உன்னால முடியாது அப்படியே அது முடிஞ்சாலும், இது உனக்கு தான் தர்ம சங்கடம் என சொல்கிறார். சிதம்பரம் மற்றும் கார்த்தியின் சவாலால் தீபா அதிர்ச்சி அடைகிறாள்.

குழப்பத்தில் ஐஸ்வர்யா: அதன் பிறகு எல்லோரும் வீட்டில் பல்லவி செய்த துரோகம் பற்றி பேசிக்கொண்டிருக்க கார்த்திக் சந்தோஷமாக வீட்டிற்கு பார்த்து குழப்பம் அடைகின்றனர். பிறகு பல்லவி நமக்காக பாடி கொடுத்த விஷயத்தை சொல்ல அனைவரும் சந்தோஷப்படுகின்றனர். ஆனால், ஐஸ்வர்யா இது எப்படி நடந்தது என அதிர்ச்சி அடைகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது பொறுத்து இருந்து பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











