தீபா கைக்கு வந்த முக்கிய பொறுப்பு.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில்,சிதம்பரம் கார்த்திகை அவமானப்படுத்த நினைக்கிறான். ஆனால், கார்த்திக் எனக்குத்தான் பாடி கொடுத்தா என்ற சொல்லி சிதம்பரத்திற்கு பல்பு கொடுக்கிறேன்
இதனால், கடுப்பான சிதம்பரம், பல்லவி உனக்கு பாடி கொடுத்திருக்கலாம் ஆனால் பல்லவி உன் பக்கத்திலேயே வந்து நின்னா கூட உனக்கு யாருனு தெரியாது. அவள நான் பார்த்திருக்கேன் என்று சொல்கிறேன். சிதம்பரத்தின் பேச்சைக்கேட்டு டென்ஷனான கார்த்திக் இன்னும் 12 நாளில் பல்லவி யார் என்பதை கண்டுபிடித்து உங்க நேரில் நிறுத்துகிறேன் என்று சவால் விடுகிறான். இதையடுத்து மகிழ்ச்சியோடு வீட்டுக்கு வரும் கார்த்தி நடந்த அனைத்தையும் வீட்டில் இருப்பவர்களிடம் சொல்லுகிறான்.இதையடுத்து இன்று என்ன நடந்தது என்று பார்க்கலாம்.

ஒட்டு கேட்கும் ஐஸ்வர்யா: இதையடுத்து கார்த்திகை தீபம் இன்றைய சீரியலில், தீபா மீனாட்சியிடம் மீட்டிங்கில் சிதம்பரம் அவமானப்பட்ட விஷயம், சவுண்ட் இன்ஜினியர் செய்த உதவி என அனைத்தையும் சொல்லிக் கொண்டிருக்கிறாள். இதை அனைத்தையும் மறைந்து இருந்து ஐஸ்வர்யா கேட்டுவிட்டு, சிதம்பத்திற்கு போன் செய்து, ஐஸ்வர்யா பாட்டை தூக்கி கார்த்திக்கு கொடுத்தது உங்க சவுண்ட் இன்ஜினியர் தான் என்ற உண்மையை உடைக்கிறாள். உடனே சிதம்பரம் அவனுக்கு நான் யாருன்னு காட்டுறேன், அதுக்கப்புறம் அந்த தீபா கதையை வச்சிக்கிறேன் என ஆவேசப்படுகிறார்.

பொங்கல் வேலை: அடுத்ததாக அருண் போன் நோண்டி கொண்டிருக்க இதை பார்த்த கடுப்பான ஐஸ்வர்யா, இவனுக்காகத்தான் நான் எல்லாத்தையும் பண்றோம் ஆனா மூணு வேல சாப்பாடு இருந்தா போதும்னு உட்கார்ந்து இருக்கான் பாரு என மனதுக்குள் திட்டி விட்டு பிறகு அருணை ஏற்றி விடுகிறாள். இதையடுத்து அபிராமி வேலையாட்களை வீட்டிற்கு அழைத்து பொங்கல் வருவதால் வீடு முழுவதையும் சுத்தம் செய்ய வேண்டும் என வேலை கொடுக்கிறார். அருணாச்சலம் என்ன விசயம் என்று கேட்க பொங்கல் வரவில்லையா அதை கொண்டாட வேண்டாமா? அதுக்கான வேலைகளை பார்க்க வேண்டாமா? என்று சொல்கிறார்.

மயங்கி விழும் அபிராபி: பிறகு அபிராமி திடீரென மயங்கி விழுகிறான். உடனே அனைவரும் வேலையும் அபிராமியே பார்த்ததும் தான் இதற்கு காரணம் என்று இந்த மூன்று மருமகளும் யாராவது ஒருத்தர் இந்த வேலையை பார்க்கட்டும் என சொல்ல அபிராமியும் சாவி கொத்தை கீழே வைக்க ஐஸ்வர்யா நழுவி கொள்ள மீனாட்சி இந்த வாய்ப்பு தீபாவுக்கு கிடைக்க வேண்டும் என மறுத்து விடுகிறாள்.

தீபாவிடம் சாபி கொத்து: பிறகு தீபா சாவியை எடுக்க வர அபிராமி சாவியை எடுத்து யார்கிட்டயும் கெஞ்சிட்டு இருக்க முடியாது விடுங்க என்று சொல்ல தீபா நான் பாத்துக்குறேன் அத்தை என்று சொல்கிறாள். இதனால் அருணாச்சலம் கார்த்திக் தீபாவிடம் சாவியை கொடுக்க சொல்ல முதலில் யோசிக்கும் அபிராமி பிறகு வேறு வழியின்றி சாவியை கொடுக்கிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











