கார்த்திக் வலையில் சிக்கிய ஐஸ்வர்யா.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோடு அப்டேட்!
சென்னை: நேற்றைய எபிசோடில், கார்த்தி, அருண் ஆகியோர் தீபாவை தேடி அலையும் போது, துங்கா கார்த்திக்கிற்கு போன் செய்து வரும் படி சொல்ல, கார்த்திக்கும் போகிறான். அப்போது, துங்கா, கீதாவை என்னிடம் ஒப்படைத்துவிடு இல்லை என்றால், நானே கண்டிப்பா கீதாவை தூக்குவேன் என்று சவால் விட, கார்த்திக் உன்னால கீதாவை எதுவும் பண்ண முடியாது உன்கிட்ட இருந்து அவங்கள காப்பாத்தி தரேன்னு நான் வாக்கு கொடுத்து இருக்கேன் என்று பதிலுக்கு சவால் விடுகிறான்.
வீட்டுக்கு வந்த கார்த்திக் கீதாவிடம் நடந்த விஷயத்தை சொல்ல கீதா நம்மால ஏதாவது பண்ண முடியுமா என்று சந்தேகத்துடன் கேட்க, நிச்சயம் பண்ணலாம் என்று இருவரும் சேர்ந்து கொண்டு, ஐஸ்வர்யா குறித்து பிளான் போடுகின்றனர். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

கார்த்திகை தீபம்: இன்றைய எபிசோடில், கார்த்திக், கீதாவிடம் நான் சொல்றத நல்லா கேளுங்க, இப்போ நான் கீழே போறேன் நீங்க யாருக்கும் தெரியாமல், பின் பக்கமா வாங்க குறிப்பாக ஐஸ்வர்யாவிற்கு தெரியக்கூடாது என்று சொல்லிவிட்டு கார்த்திக் கீழே வருகிறான். அப்போது, அபிராமி எங்க கார்த்திக் கிளப்பிட்ட என்று கேட்க, நான் எங்க அம்மா போவேன் தீபாவை தேடித்தான் போகிறேன் என்று சொல்லிவிட்டு காரில் வந்து கீதாவிற்காக காத்திருக்கிறான்.
கார்த்திக் போட்ட பிளான்: கீதா, அறையில் இருந்து கிளம்பி வெளியில் வர, அப்போது ஐஸ்வர்யா வர, கீதா மறைந்து கொள்கிறாள். காரில் இருக்கும் கார்த்திக், கீதா நீண்ட நேரமாகியும் வராததால், என்ன ஆச்சு என்று கீதாவிற்கு போன் செய்கிறான். அப்போது, கீதா போனை எடுத்து, இங்கே ஐஸ்வர்யா அண்ணி இருக்காங்க அதான் மறைந்த இருக்கேன், அவள் போனதும் வந்துவிடுகிறேன் என்கிறாள். உடனே சரி சரி யார் கண்ணிலும் படாதபடி வாங்க, அப்போத்தான் நாம போட்ட பிளான்படி ஐஸ்வர்யா சிக்குவா என்று சொல்ல, சரி இதோ வருகிறேன் என்று சொல்லிவிட்டு, காரில் வந்து கீதா உட்கார இருவரும் கிளம்புகின்றனர்.
தீபாவாக மாறிய கீதா: இதையடுத்து, கார்த்திக், கீதாவை தன் நண்பன் சங்கர் இருக்கும் இடத்திற்கு அழைத்து செல்கிறான். அப்போது, கார்த்திக் இப்போ நீங்க கீதா இல்ல, தீபா. நீங்க தீபா போலவே நடிச்சி, ஐஸ்வர்யாவிடம் இருந்து உண்மையை வாங்க வேண்டும் என சொல்லிவிட்டு, கீதாவிற்கு தீபா போல பேசுவது எப்படி என்று டிரையினிங் கொடுக்கிறான் கார்த்திக். அப்போது,கீதா கவலைப்படாதீங்க கார்த்திக் நிச்சயம் நான் ஐஸ்வர்யாவிடம் இருந்து உண்மையை வாங்கிவிடுவேன் என்று சொல்கிறாள்.
பயத்தில் ஐஸ்வர்யா: மறுபக்கம், வீட்டிற்கு போன் செய்யும் கார்த்திக், தீபா கிடைத்துவிட்டாள், இப்போது வீட்டுக்குத்தான் வந்து கொண்டு இருக்கிறோம் என்று சொல்ல, அனைவரும் மகிழ்ச்சி அடைகின்றனர். ஆனால், ஐஸ்வர்யா, அய்யோ, தீபா கிடைத்துவிட்டாளா என்ன செய்வது என்று பயத்தில் புலம்பிக்கொண்டு இருக்க, வீட்டின் முன் கார் வந்து நிற்க அதில் இருந்து தீபா வேடத்தில் இருக்கும் கீதா வந்து இறங்க. ஓடிவந்த அபிராமி என்ன ஆச்சு என்று விசாரிக்கிறாள்.
அடுத்து நடக்கப்போவது என்ன: இதையடுத்து, கீதா வீட்டிற்கு வந்ததும், நான் தனியாக ஐஸ்வர்யாவிடம் பேச வேண்டும் என்று சொல்ல, அபிராமி எதுக்கு வந்ததும், ஐஸ்வர்யா கூட பேசணும் இவ ஏதாவது பண்ணாளா என்று கேட்க இல்லை அத்தை, நான் பேசிவிட்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டு ஐஸ்வர்யா, கீதா இருவரும் அறைக்குள் செல்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











