எழிலுக்கு நடந்த விபத்து.. மனோகரியின் ரகசியத்தை உடைத்த வேலு.. நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட்!
சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நினைத்தேன் வந்தாய் சீரியலில், சுடருக்கு போன் செய்யும் வேலு, எழில் வீட்டுக்குள்ள இருந்தா உன்னை ஒன்னும் பண்ணமுடியாதா, முதலில் அந்த எழிலை கொல்றேன். அப்புறம் உன்னை வீடு புகுந்து தூக்குறேன். என் மேல கைய வெச்சதுக்கு அவனை மட்டும் இல்ல, அவன் குடும்பத்தையே தூக்குறேன்.
இப்போ அவன் ஹாஸ்பிடல் தானே போயிட்டு இருக்கான், அப்படியே அவனை கொல்ல போறேன் என்று சொல்ல, அதிர்ச்சி அடைந்த சுடர் எழிலுக்கு போன் செய்ய அவன், போனை எடுக்காத நிலையில் ஆட்டோவில் எழிலை காப்பாற்றுவதாக வேகவேகமாக செல்கிறாள். இப்படி இருக்கும் நிலையில் இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

மருத்துவமனையில் எழில்: நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோடில், எழில் கார் மீது வேனை மோதி விபத்தை ஏற்படுத்த, விபத்தை நேரில் கண்டு பதறும் சுடர் அவனை ஹாஸ்பிடலில் அட்மிட் செய்து கனகவல்லிக்கு தகவல் கொடுத்து வேலுவால் தான் இப்படி ஆச்சு, அவன் எனக்கு போன் பண்ணி இருந்தான் என்று அழுகிறாள். விஷயம் அறிந்து ஹாஸ்பிடல் வந்த மனோகரி உன்னால் தான் எழிலுக்கு இந்த நிலைமை, உன்ன சும்மா விட மாட்டேன் என்று சத்தம் போட கனகவல்லி எழிலுக்கு இப்படி நடந்ததுக்கு அவ என்ன பண்ணுவா என்று கேள்வி கேட்க இவளால் பிரச்சனை வருது, பார்க்க வேண்டியவர்களை பார்த்து வந்து உன்ன வசிக்கிறேன் என்று கோபப்பட்டு கிளம்பி செல்கிறாள்.
வசமாக சிக்கிய மனோகரி: சுடர் எழிலுக்கு எதுவும் ஆக கூடாது என்று பதற மறுபக்கம் மனோகரி வேலுவை சந்தித்து நீ எதுக்கு எழிலை கொல்ல பார்க்குற, அந்த சுடரை என்ன வேணா பண்ணிக்கோ, ஆனால் என் எழில் மேல கையை வச்சா உன்ன சுட்டு தள்ளிடுவேன் என்று துப்பாக்கி முனையில் மிரட்டுகிறாள். வேலு உன்னுடைய மிரட்டலுக்கு எல்லாம் நான் பயப்பட மாட்டேன். உன்னை பத்தி எனக்கு தெரியாதுன்னு நினைக்கிறியா என்று பிளாஷ்கட்டை ஓபன் செய்ய மனோகரி பற்றிய விஷயங்களை போட்டு உடைக்கிறான் வேலு.
இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்


Click it and Unblock the Notifications











