உயிரோடு இருக்கும் தீபா… மகிழ்ச்சியில் கார்த்திக்.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோடு!
சென்னை: நேற்றைய எபிசோடில், தீபாவை காப்பாற்றிய கற்பகம் தீபாவை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு அங்கிருந்து கிளம்பி விடுகிறார். மறுபக்கம், கார்த்திக் ஒவ்வொருத்தரிடமும் தீபாவின் போட்டோவை காட்டி விசாரித்துக்கொண்டு இருக்க, தீபாவை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்த பெண்ணின் கணவர், தீபாவின் தாலியை விற்க எடுத்து வருகிறான். இதையடுத்து இன்று நடப்பதை பார்க்கலாம்.
அந்த நேரத்தில், நண்பனுக்கு போன் செய்து தாலியை தூக்கிப்போட்டு வர, அதுகீழே விழுந்துவிட அது கார்த்திக் கண்ணில் பட்டுவிட, இது யாருடைய என்று விசாரிக்க அவன் பொய் சொல்லுகிறான். பின் சரவணன் அவனை அடித்து விசாரிக்க, இரண்டு நாளைக்கு முன்னாடி ஒரு பெண் மலையில் இருந்து விழுந்தா. அந்த பெண்ணை என் மனைவிதான் காப்பாற்றி வீட்டில் பார்த்துக்கொண்டா. நேற்று ஒரு டாக்டர் வந்து சென்னை ஹஸ்பிட்டல்ல சேர்க்க சொன்னாரு, அதன் என் பொண்டாட்டி, ஆட்டோல கூட்டிக்கிட்டு போனா, இப்போ வீட்டுக்கு வந்து இருப்பா வாங்க வீட்டுக்கு போகலாம் என்று அழைத்து செல்கிறான்.

வேண்டிக்கொள்ளும் மைதிலி: அதே நேரம் மருத்துவமனையிலிருந்து மீனாட்சி, மைதிலி கோவிலுக்கு செல்கின்றனர். அப்போது மீனாட்சி அந்த பெண்ணுக்காக கடவுளிடம் வேண்டி கொண்டு பிராத்தனை செய்துவிட்டு, மீண்டும் மருத்துவமனைக்கு வரும் இவர்கள், நர்ஸிடம் அனுமதி கேட்டு அந்த பெண்ணுக்கு ( தீபா ) கோவிலில் வேண்டிக்கொண்டேன். குங்குமம் வைக்க வேண்டும் என்று சொல்ல, நர்ஸ் சக்தி அவர்களை icu-ல் நுழைய போகும் சமயத்தில் டாக்டர் வந்து விடுகிறார். இவர்கள் யார் என்று விசாரிக்க, இந்த பெண்ணுக்காக வேண்டிக் கொண்டார்கள் என்று சொல்ல டாக்டர் இது ஐசியு யாரையும் அனுமதிக்க முடியாது என்று சொல்லி திருப்பி அனுப்பி விடுகிறார்.
மகிழ்ச்சியில் கார்த்திக்: மறுபக்கம், கார்த்திக், சரவணனுடன் கற்பகம் வீட்டிற்கு வந்து தீபாவின் போட்டேவை காட்டி விசாரிக்கின்றனர். அப்போது, அந்த பெண் தீபாவை மருத்துவமனையில் சேர்த்து இருப்பதாக கூற, தீபா உயிரோடு இருப்பதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











