கடத்தப்படும் சாமுண்டீஸ்வரி.. ரேவதிக்காக விட்டுக் கொடுத்த கார்த்திக்.. கார்த்திகை தீபம்!
சென்னை: ரேவதி கார்த்திக்கை பற்றியே ரேவதி நினைத்துக்கொண்டு,ஹாஸ்பிடலுக்கு போன் போட்டு, என்னை யார் அட்மிட் செய்த கார்த்திக் பற்றி சொல்லி அவரின் நம்பரை வாங்குகிறாள். நம்பரை வாங்கிய ரேவதி கார்த்திக்கு போன் செய்து, நான் ரேவதி பேசுகிறேன், உங்களை பார்ப்பதற்காகத்தான் நான் கோவிலுக்கு வந்தேன். ஆனால், அதற்குள் மயங்கி விழுந்துவிட்டேன். நீங்க மக்களுக்கு ரொம்ப நல்ல விஷயத்தை செய்கிறீர்கள் அப்படியே செய்யுங்கள் என சொல்கிறாள்.
இதையடுத்து, கோவிலில் சாமுண்டீஸ்வரிக்கு முதல் மரியாதை கொடுப்பதற்கான ஏற்பாடுகள் நடக்க சாமுண்டீஸ்வரி குடும்பத்தினர் அனைவரும் கோவிலுக்கு வருகின்றனர். மற்றொரு பக்கத்தில் இந்த சாமுண்டீஸ்வரியை இப்படியே வளரவிடக்கூடாது. அவளுக்கு கோவில் முதல் மரியாதை கிடைக்கக்கூடாது அவளை எப்படியாவது கடத்தி கொன்றுவிட வேண்டுமென சிவனாண்டியும், முத்துவேலும் திட்டம் போடுகின்றனர்.

கார்த்திகை தீபம்: இன்றைய எபிசோடில் கோவிலுக்கு வரும் கார்த்திக், ராமர், சீதா சிலை பார்க்கிறார். அந்த சிலையை பார்த்ததும் ரேவதியின் நினைவுவர அதை பணம் கொடுத்து வாங்கிவிட்டு பிறகு வாங்கிக்கொள்வதாக சொல்கிறார். இதையடுத்து, ரேவதி சிலை கடைக்கு வர அங்கு ஒரு ராமர், சீதா சிலையை பார்த்து அந்த சிலையை விலைக்கு கேட்கிறாள். ஆனால், கடைக்காரர் அந்த சிலைக்கு ஏற்கனவே ஒருத்தர் பணத்தை கொடுத்துட்டு போய் இருக்காரு.. அதனால அதை தர முடியாது என்று சொல்ல ரேவதி யார் வாங்கியது? அவங்களுடைய போன் நம்பரை கொடுங்க நான் பேசுகிறேன் என்கிறார். கடைக்காரர் அந்த நம்பரை கொடுக்க, அது கார்த்தியின் நம்பர் என தெரிய வருகிறது.
கடத்தப்படும் சாமுண்டீஸ்வரி: உடனே கார்த்திக்கு போன் செய்து ராமர் சிலை குறித்து சொல்ல கார்த்திக் தாராளமாக நீங்க வாங்கிட்டு போங்க என்று சொல்கிறான். இதனால், ரேவதி கடைக்காரரிடம் சொல்லிவிட்டு, அந்த சிலையை வாங்கிக் கொண்டு கிளம்புகிறாள்.தொடர்ந்து இங்கே, கோவிலில் சிவனாண்டியின் ஆட்கள் சாமுண்டீஸ்வரியை கடத்துகின்றனர். கடத்தப்பட்ட சாமுண்டீஸ்வரி ஒரு குடோனுக்குள் அடைத்து என்னையும் என் பொண்டாட்டியும் பிரிச்ச இவர் உயிரோடவே இருக்க கூடாது என சிவனாண்டி கொளுத்த முடிவெடுக்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











