ரேவதிக்கு ரகசிய கல்யாணம்.. சாமுண்டீஸ்வரி போட்ட திட்டம்.. கார்த்திகை தீபம்!
சென்னை: கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய ஊர் மக்கள் கோவில் பூஜைக்காக அழைக்க சாமுண்டீஸ்வரியன் வீட்டிற்கு வருகை தருகின்றனர். சாமுண்டீஸ்வரி அதெல்லாம் வேண்டாம் என்று மறுக்க, ரேவதி நான் போறேன் என சொல்லிவிட்டு ரோகினி மற்றும் மயில்வாகனத்தை அழைத்துக் கொண்டு கோவிலுக்கு செல்கிறாள். அங்கே கார்த்தியை சந்திக்க நீங்க என் மாமா தானே, இத்தனை நாள் யார் என்று தெரியாமல், சார் என அழைத்து வந்தேன். ஆனால், அப்போ தான் மாமா என்று தெரிந்துவிட்டதே, நான் உங்களை மாமா என்று கூப்பிடுகிறேன் என்று சொல்ல இருவருக்கும் இடையே காதல் அலை பாய்கிறது. ரேவதி கார்த்திக்கு இந்த கல்யாணத்தை நிறுத்தி தன்னை திருமணம் செய்து கொள்வான் என எதிர்பார்க்கிறாள்.
இதையடுத்து கார்த்திக் மயில்வாகனத்தை தனியாக அழைத்து அத்தை சாமுண்டீஸ்வரி ரேவதிக்கு பார்த்து இருக்கும் மாப்பிள்ளை நல்லவன் இல்லை. அவன் பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து விற்பனை செய்யும் ரெட் என்ற உண்மையை சொல்கிறார். இதை கேட்டு மயில்வாகனம் அதிர்ச்சி அடைகிறார். மேலும் அவனை ஆதாரத்தோடு பிடிக்க வேண்டும், அதற்காகத்தான் காத்து இருக்கிறேன் என சொல்கிறார்.

கார்த்திகை தீபம்: இன்றைய எபிசோடில், சந்திரகலா, சிவனாண்டி ஆகியோர் கூட்டணி சேர்ந்து மருதுக்கும் ரேவதிக்கும் எப்படி திருமணத்தை நடத்தி வைக்கலாம் என திட்டம் போடுகின்றனர். இதையடுத்து, சிவனாண்டி ஒரு ஜோசியரை அனுப்பி இந்த கல்யாணம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்றால் ஒரு பரிகாரம் செய்ய வேண்டும் என சொல்லி அப்படியே ரேவதிக்கும் மருதுக்கும் கல்யாணத்தை செய்துவைத்துவிடலாம், இப்படி செய்தால் அது கார்த்திக்கிற்கு தெரியாது என சொல்கிறார். இந்த திட்டத்தை சாமுண்டீஸ்வரியிடம் சந்திரகலா சொல்ல, நல்ல திட்டம் தான் ஆனால், இதற்கு மாமா சம்மதிக்க மாட்டாரு என்று சொல்கிறாள்.நீ தான் அக்கா அவர்களை சம்பதிக்க வைக்க வேண்டும் இல்லை என்றால், நிச்சயம் கார்த்தி இந்த கல்யாணத்தை நிறுத்திவிடுவான் என சொல்கிறாள்.

மாமானு கூப்பிட்ட ரேவதி: மறுபக்கம் ரேவதி ஊரணி பொங்கல் வைப்பதற்காக வர அப்போது கார்த்தியை சந்தித்த அவள் நீங்க எனக்கு மாமா தானே நான் உங்களை மாமானே கூப்பிடுகிறேன் என்று சொல்கிறாள். அனைவரும் சேர்ந்து ஊரணி பொங்கல் வைக்க தொடங்குகின்றனர், கோவிலில் ஊரணி பொங்கல் வைத்த ரேவதி அதை கார்த்திக்கு கொடுத்து டேஸ்ட் பார்க்க சொல்கிறாள். அதை சாப்பிட்டுபார்த்த கார்த்திக், இந்த பொங்கலை விட நீ மாமானு கூப்பிடுவது நல்ல இருக்கு என சொல்கிறார். இதைப்பார்த்து அனைவரும் மகிழ்ச்சி அடைகின்றனர்.


Click it and Unblock the Notifications