அடித்து தூக்கி வீசப்பட்ட ரேவதி.. கல்யாண நாளில் காத்திருந்த அதிர்ச்சி.. கார்த்திகை தீபம்!
சென்னை: ரேவதியை கார்த்திக் என்னிடம் சொல்லாமல் வீட்டை விட்டு வெளியில் போகக்கூடாது என்று சொன்ன போதும், அதையும் மீறி ரூமில் படுத்து இருப்பது போல செட் செய்து வைத்துவிட்டு, ரோகிணியிடம் கேட்டா சமாளித்துக்கொள் அரை மணி நேரத்தில் வந்துவிடுகிறேன் என்கிறாள். இதையடுத்து, ஆட்டோவில் ஏற, வெளியில் காரில் காத்து இருக்கும் முருகன், அந்த ஆட்டோவை பின் தொடர்ந்து செல்கிறான். சரியான நேரத்தில் ஆட்டோவை அடித்து தூக்கிவிட்டு, விபத்து போல நாடகமாட திட்டம் போட்டு, ஆட்டோவை பின் தொடர்ந்து செல்கிறான்.
இன்றைய எபிசோட்: கார்த்திகை தீபம் சீரியல் இன்றைய எபிசோடில், கார்த்தியை பார்த்த சாமுண்டீஸ்வரி என்னடா கல்யாண நாளை கொண்டாடுறீங்களா? இன்னும் 6 மாசத்துல உன்னையும் ரேவதியை பிரிச்சி, இந்த வீட்டை விட்டு விரட்டுகிறேன் என சாமுண்டீஸ்வரி கார்த்திக்கிடம் சவால் விடுகிறாள். இதைக்கேட்டு கார்த்திக், நான் இங்கதான் இருப்பேன், என்னையும் ரேவதியை யாராலும் பிரிக்க முடியாது என, முடிஞ்ச பிரிங்க என பதிலுக்கு சவால் விடுகிறான்.

அடித்து தூக்கிய கார்: மற்றொரு பக்கம், ரேவதி பைக் டெலிவரி கொடுக்க சொல்லிவிட்டு வெளியே வர அவளை அடித்து தூக்குவதற்காக காத்திருந்த கார் ரேவதி மீது மோத, ரேவதி தூக்கி வீசப்படுகிறாள். இந்த சமயத்தில் கார்த்திக்கு ரேவதிக்கு எதுவும் நடந்தது போல உள்ளுணர்வு ஏற்படுகிறது. இதனால் வீடு முழுக்க ரேவதியை தேடி ரோகிணிடம் கேட்க, ரோகிணி அவ தூக்கிட்டு இருக்கா என்று சொல்கிறாள். இதையடுத்து கார்த்திக் ரூமுக்கு சென்று பார்க்க, அவள் படுத்து இருப்பது போல செட் செய்து வைத்து இருப்பது தெரியவருகிறது. இதையடுத்து பதறிப்போன கார்த்திக் யிடம் விசாரிக்க ஒரு கட்டத்தில் உண்மையை மறைக்க முடியாத ரோகிணி, ரேவதி வெளியே சென்ற விஷயத்தை சொல்கிறாள். இதனால் கார்த்திக் பதறி போய் ரேவதியை தேடி வருகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











