Veera: குழப்பத்தை உருவாக்கிய குழந்தை.. சதித்திட்டத்தை அரங்கேற்றும் விஜி.. வீராவில் இன்று என்ன?
சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் 'வீரா' நாடகம்: புதிய திருப்பங்களுடன் பார்வையாளர்களை கவர்கிறது. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் 'வீரா' தொடர், தமிழ் தொலைக்காட்சி பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நாடகம், குடும்ப உறவுகள், உணர்ச்சிகரமான தருணங்கள் மற்றும் சமூகத்தில் பெண்களின் வலிமையை எடுத்துரைக்கும் கதைக்களத்துடன், பார்வையாளர்களை தொடர்ந்து கவர்ந்து வருகிறது. 'வீரா' நாடகத்தின் சமீபத்திய புரொமோ, ஜீ தமிழின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது
இந்த புரொமோவில், கதையில் வரவிருக்கும் புதிய திருப்பங்கள் மற்றும் முக்கிய கதாபாத்திரங்களின் உணர்ச்சிகரமான பயணம் குறித்து ஒரு சிறிய அறிமுகம் வழங்கப்பட்டுள்ளது. இந்த புரொமோ, பார்வையாளர்களிடையே பெரும் ஆவலை தூண்டியுள்ளது.'வீரா' தொடர், ஒரு பெண்ணின் தைரியமான பயணத்தையும், அவள் எதிர்கொள்ளும் சவால்களையும் மையப்படுத்தி, குடும்ப மதிப்புகளையும், பெண்களின் உறுதியையும் வெளிப்படுத்துகிறது.
இதில் நடிக்கும் முக்கிய நடிகர்கள், தங்கள் இயல்பான நடிப்பின் மூலம் பார்வையாளர்களின் மனதை கவர்ந்துள்ளனர். குறிப்பாக, புரொமோவில் காணப்படும் தீவிரமான காட்சிகள், கதையில் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.ஜீ தமிழ் தொலைக்காட்சி, 'வீரா' தொடரை திங்கள் முதல் சனிக்கிழமை வரை மாலை 7:15 மணிக்கு ஒளிபரப்பி வருகிறது.
இந்த தொடர், தமிழகத்தில் மட்டுமல்லாமல், உலகளவில் உள்ள தமிழ் பார்வையாளர்களிடையேயும் பெரும் புகழ் பெற்றுள்ளது. சமீபத்தில், தொடரின் ஒளிபரப்பு நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டு, கூடுதல் நேரம் ஒளிபரப்பாகி வருவதாகவும், இது பார்வையாளர்களுக்கு மேலும் உற்சாகத்தை அளித்துள்ளதாகவும் சமூக வலைதளங்களில் பேசப்படுகிறது. 'வீரா' தொடரின் அடுத்தடுத்த எபிசோடுகளில், மேலும் பல சுவாரஸ்யமான திருப்பங்கள் நமக்காகக் காத்திருக்கின்றன.
https://youtu.be/glhvmFTEmJI?si=AEBEkb2TzTNzN6JG
இன்றைய புரொமோ: அந்த வகையில் இன்றைய எபிசோடில், பிருந்தா தனது மாமனார் ராமச்சந்திரனிடம் தனது நிற்கதி நிலையைச் சொல்லி புலம்பிக் கொண்டு இருக்கிறார். இவர்கள் இருவரும் வீட்டின் கிணற்றுக்கு அருகில் நின்று பேசிக்கொண்டு இருப்பதை வில்லி விஜி மற்றும் விஜியின் அம்மாவும் பார்த்துவிடுகிறார்கள்.
வில்லி விஜியின் சதி: பிருந்தாவும் ராமச்சந்திரனும் பேசிவிட்டு கிளம்பும்போது, ராமச்சந்திரன் காதுகளில் படும்படி, விஜி தனது அம்மாவிடம், அம்மா என்னோட குழந்தைக்கு நான் என்ன பெயர் வைக்கலாம்னு இருக்கேன்னு தெரியுமா? எனக் கேட்கிறார். மேலும் ஆண் குழந்தை பிறந்தால் ராமச்சந்திரன் என்றும் பெண் குழந்தை பிறந்தால் காவேரி என்றும் பெயர் வைப்பேன் என்று கூறுகிறார். இதைக் கேட்டதும் வில்லி விஜியின் அம்மா, 'நல்ல பேருடி, இந்த குடும்பத்துக்கு ராசியான பேரு' எனக் கூறுகிறார்.

மாறன் - ராமச்சந்திரன்: இவர்களின் இந்த பேச்சு ராமச்சந்திரனின் காதுகளில் விழுந்துவிடுகிறது. உடனே அமைதியாக நிற்கிறார் ராமச்சந்திரன். இப்படி இருக்கும்போது, உடனே வில்லி விஜி, அம்மா நாம இப்படி நியாயம் தர்மம்னு பேசற வரைக்கும் தான் ராமச்சந்திரனிடம் தப்பிக்கிறோம். இதுவே மாறன் மாதிரி இந்த ஆளு இருந்தாருனா நாம எப்பவோ வீட்டை விட்டு வெளியே போயிருப்போம் என்று கூறுகிறார். ஆனால் இந்த பேச்சு ராமச்சந்திரனின் காதுகளில் விழுந்ததா? இல்லையா? என்பது இன்றைய எபிசோடில் தான் தெரியும்.


Click it and Unblock the Notifications











