தீபாவின் பையில் வைர நெக்லஸ்.. பரமேஸ்வரி பாட்டி எடுத்த முடிவு - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினம் தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம்.

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த சீரியல் செம்பருத்தி. இந்த சீரியலில் ஆதி கதாபாத்திரத்தில் கதாநாயகனாக நடித்த கார்த்திக் ராஜ், இந்த சீரியலில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
மேலும், ரியா சௌத்ரி, மீனா கிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பதை இப்போது பார்க்கலாம்.
கார்த்திகை தீபம் சீரியல்: நேற்றைய எபிசோடில் மலர் மற்றும் ஐஸ்வர்யா என இருவரும் சேர்ந்து திட்டம் போட்டு நெக்லஸை திருடி தீபாவின் பேக்கில் வைத்து நெக்லஸை காணவில்லை என கிளப்பி விட்ட நிலையில் இன்று தீபாவின் பேக்கில் நெக்லஸ் இருப்பதை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள்.
குடும்பத்தில் பிரச்சனை: இருந்தாலும் கார்த்திக் தீபாவை விட்டுக் கொடுக்காமல் இதை தீபா எடுத்து இருக்க மாட்டாங்க யார் எடுத்தாங்க என்பதை நான் வெளிப்படையாக சொல்றதுனால இந்த குடும்பத்துக்கு தான் அவமானம் அதனால நான் அதை சொல்ல விரும்பல என்று சொல்கிறான்.

நெக்லஸ் பிரச்சனை: பரமேஸ்வரி பாட்டியும் அந்த நெக்லஸ தீபாவுக்கு கொடுக்கணும்னு தான் இருந்தேன் அதுவே தீபா கிட்ட போய் சேர்ந்துடுச்சு ஒன்னும் பிரச்சனை இல்ல என்று சொல்லிவிடுகிறார். பிறகு தீபா இது நெக்லஸ் அபிராமி அம்மா கையால எனக்கு கொடுக்கணும் என்று ஆசையை சொல்ல அபிராமி வேறு வழி இல்லாமல் அதை தீபாவுக்கு போட்டு விடுகிறாள்.

பிறகு பெட் ரூமுக்கு வந்த கார்த்திக் மற்றும் தீபா என இருவரும் நெக்லஸ் குறித்து பேச அபிராமி அந்த வழியாக வருகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக கார்த்திகை தீபம் சீரியலில் அடுத்து என்ன நடக்கக்போகிறது என்பதை குறித்து அறிய இந்த சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இன்று 9 மணிக்கு காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











