முதுகிலே குத்திய அண்ணன்.. 100 கோடிக்கும் மேலான சொத்துக்களை இழந்த கார்த்திக்!

சென்னை: பிரபல நடிகர் கார்த்திக் , தமிழ் திரையுலகில் ஒரு காலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர். அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த பல்வேறு தகவல்கள் அப்போது தொடர்ந்து வெளிவந்து கொண்டே இருக்கிறடு. கார்த்திக், நடிகை ராகினியை மணந்தார். இந்தத் திருமணத்தின் மூலம் அவர்களுக்கு இரண்டு மகன்கள் பிறந்தனர். மூத்த மகன், தற்போது நடிகராக இருக்கும் கௌதம் கார்த்திக்.

ராகினியுடன் குடும்ப வாழ்க்கை நடத்திக்கொண்டிருந்தபோதே, கார்த்திக் அவரது சகோதரியையும் மணந்ததாகக் கூறப்படுகிறது. இந்தத் திருமணத்தில் அவருக்கு ஒரு மகன் உள்ளார். கார்த்திக் இரண்டாவது திருமணம் செய்துகொண்டது குறித்து டாக்டர் காந்தராஜ் ஒருமுறை பேசியிருக்கிறார். இது பெரும் சர்ச்சையாக மாறியது.

கார்த்திக்கும் ராகினியும் இணைந்து ஒரு திரைப்படத்தில் நடித்தபோது காதல் வயப்பட்டு, திருமணம் செய்துகொண்டனர். ராகினி கர்ப்பமாக இருந்த சமயத்தில், அவரைப் பார்க்க வந்த ராகினியின் சகோதரியைக் கண்ட கார்த்திக், அவரையும் மணந்ததாக காந்தராஜ் தெரிவித்தார். அதன் பின்னர், கார்த்திக் தனது திரைப்பட வாழ்க்கையிலிருந்து விலகினார். மார்க்கெட்டை இழந்து வாய்ப்பு குறைந்து அவர் விலகவில்லை; அவராகவே நடிப்பிலிருந்து ஒதுங்கினார். அதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை என்றும் காந்தராஜ் குறிப்பிட்டார்.

Karthik Personal Life Marriage And Family Dynamics He Loss His Assets 100 Crore Value Throwback

கௌதம் கார்த்திக், ஒரு நேர்காணலில் தனது பெற்றோர் சிறு வயதிலேயே பிரிந்துவிட்டதாகக் கூறியிருந்தார். "என்னையும் என் சகோதரனையும் என் அம்மாதான் வளர்த்தார். அப்பா திரைப்பட வேலைகளில் பிஸியாக இருந்தார். வருடத்திற்கு இரண்டு முறை மட்டுமே அவரிடமிருந்து தொலைபேசி அழைப்புகள் வரும், எப்போதாவது வந்து பார்ப்பார். நண்பர்களும் உறவினர்களுமே எனக்கு ஆறுதலாக இருந்தார்கள்" என்று கௌதம் கார்த்திக் தெரிவித்தார். கௌதம் கார்த்திக் மஞ்சிமா மோகனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

சொத்துக்களை ஏமாற்றியவர்: ஒருமுறை கார்த்திக் தனது சொந்த குடும்பத்தினரால் ஏமாற்றப்பட்டதாகக் குற்றம் சாட்டியிருந்தார். தனது சொத்துக்களை அண்ணன் அபகரித்துவிட்டதாக அவர் கூறினார். "என் அண்ணன் கணேஷ் என் குடும்பத்தையே ஏமாற்றிவிட்டார். நான் சம்பாதித்த அனைத்தையும் அம்மாவிடம்தான் கொடுத்தேன். அவர்கள் என்ன செய்தார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. நான் அம்மாவைக் குறை சொல்ல மாட்டேன்; அம்மா ஒரு தெய்வம். என் அண்ணன் என்ன செய்தான் என்று எனக்குத் தெரியாது. அம்மாவை ஏமாற்றி, அவரது ஆங்கில அறிவு இன்மையையும், வயதான நிலையையும் பயன்படுத்தி ஒரு உயில் எழுதி வாங்கிக்கொண்டனர். அந்தச் சொத்தின் இன்றைய மதிப்பு நூறு கோடி ரூபாய்க்கும் மேல். அம்மாவின் பெயரில் உள்ள மற்ற சொத்துக்களுக்கும் அவர்களே உரிமையாளர்கள் என்று எழுதி வாங்கிக்கொண்டனர்" என்று கார்த்திக் அப்போது குற்றம் சாட்டினார். இந்தக் குற்றச்சாட்டை கார்த்திக் சுமார் 11 ஆண்டுகளுக்கு முன்பு முன்வைத்தார்.

அப்பா மகன் பிரச்னை: கார்த்திக்கும் அவரது மகன் கௌதம் கார்த்திக்கும் நீண்ட காலமாகப் பேசிக்கொள்வதில்லை என்ற வதந்திகள் தமிழ் திரையுலகில் பரவின. கௌதம் மற்றும் மஞ்சிமா திருமணம் கார்த்திக்கின் சம்மதத்துடன் நடைபெறவில்லை என்றும் கூறப்பட்டது. ஆனால், மஞ்சிமா மோகன் இந்த வதந்திகளை மறுத்தார். "திருமணத்திற்கு அவரை அழைத்தோம். எனது மாமனார் என்னிடம் மிகவும் அன்பாகப் பழகுகிறார். அவர் மிகவும் அமைதியான மனிதர்" என்று மஞ்சிமா மோகன் கூறினார். கௌதமுக்கு அவரது தந்தை கார்த்திக்கை விட, அம்மா ராகினியுடன்தான் அதிக நெருக்கம். அம்மா தன்னைத் தனியாக வளர்த்தது குறித்து கௌதம் கார்த்திக் பலமுறை பேசியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X