ரஜினி கொடுக்கிறது யாருக்குமே தெரியாது.. முத்து படத்தில் அவர் செய்தது..நெகிழ்ந்த ரமேஷ் கண்ணா!
சென்னை: நடிகர், இயக்குநர், கதாசிரியர், திரைக்கதை ஆசிரியருமா ரமேஷ் கண்ணா, முத்துப்படத்தில் ரஜினியுடன் பணியாற்றியது குறித்த அனுபவம் குறித்து பேசிய அவர், ரஜினி செய்யும் உதவி யாருக்கும் தெரியாது என்றார்.
அதில், ரஜினிகாந்த் எப்போதுமே தான் பெரிய நடிகர் சூப்பர் ஸ்டார் என்கின்ற நினைப்புடன் யாருடனும் அவர் பழகியது இல்லை. முத்துப்படத்தில் நான் அசிஸ்டன்ட் டைர்க்டராக இருந்த போது என் தோல் மீது கை போட்டுக்கொண்டு இயல்பாக பேசுவார். என்னிடம் மட்டும் இல்லை அனைவரிடமும் இயல்பாக பழகக்கூடியவர். அதே போல கமல், ரஜினி இருவரும் ஒவ்வொரு காட்சியிலும் மிகவும் இன்வால்வ்மெண்டுன் நடிப்பார்கள். சில நடிகர்கள காட்சி முடிந்ததும். அடுத்த வேலையை பார்க்க சென்றுவிடுவார்கள். ஆனால், இவர்கள் இருவரும் அந்த படப்பிடிப்பது தளத்தில் இருக்கும் வரையில், அடுத்து என்ன காட்சி, அதில் யார் எப்படி நடிகிறார்கள்? அடுத்த சீன் என்ன என்று அதில் தான் கவனமாக இருப்பார்கள்.

ரமேஷ் கண்ணா: தன்னுடன் நடிக்கும் மற்ற நடிகர்களும் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்றால் எண்ணம் ரஜினியிடம் உண்டு. கொஞ்சம் கூட யோசிக்காமல், அவர்களிடம் சென்று நீங்க இப்படி நடிச்சா, இந்த சீன்சூப்பரா இருக்கும் என்று சொல்லுவார். இந்த காலத்தில் அதை அப்படி எந்த நடிகர் சொல்லுவாங்க. இப்படி ரஜினி பற்றி சொல்வதற்கு பல விஷயங்கள் இருக்க, அதை வைத்து ஒரு புத்தகமே போடலாம் அந்த அளவுக்கு அவரிடம் நிறைய பண்புகள் இருக்கிறது என்றார்.
அதிசயமான மனிதர்: தொடர்ந்து பேசிய அவர், முத்து படத்தில் நடந்த மற்றொரு சுவாரஸ்யமான விஷயம் குறித்து பேசினார். வழக்கமாக படம் பிடிப்பது முடிந்ததும், அனைவருக்கும் ஏதாவது ஒரு கிப்டை கொடுப்பார்கள். அப்படித்தான் முத்து படத்தின் படப்பிடிப்பு முடிந்த போது அனைவருக்கும் செயின் போட்டால் நன்றாக இருக்கும் என அனைவரும் சும்மா பேசிக்கொண்டு இருந்தோம். உடனே ரஜினி, அந்த படத்தில் வேலை செய்த, நடித்த அனைவருக்கும் முத்து என போட்டு ஒரு சவரனின் செயினை பரிசாக கொடுத்தார். அதை பார்த்து அனைவருக்கும் ஆச்சரியமாக இருந்தது. இன்றைய காலத்தில் ஒரு சவரன் கிட்டத்தட்ட ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் இருக்கிறது ஆனால் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் அவர் கவலைப்படமே வேல்லை, முத்து படத்தில் இரண்டு மூன்று காட்சிகளில் வந்து சென்றவர்களுக்கும் ரஜினி தங்க செயினை பரிசாக கொடுத்தார். அவரைப்போல ஒரு அதிசயமான மனிதரை பார்க்கவே முடியாது என்று ரஜினிகாந்த் பற்றி ரமேஷ் கண்ணா அந்த பேட்டியில் மனம் திறந்து பேசி உள்ளார். அவர் அளித்த பழைய பாட்டி தற்போது இணைகர்தல் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











