X
முகப்பு சினி தரவரிசை

Baakiyalakshmi: பூகம்பமாக வெடித்த பிரச்சனை.. வீட்டை விட்டு வெளியேரும் எழில்!

Author Sakthi Harinath | Published: Monday, August 12, 2024, 03:11 PM [IST]

Baakiyalakshmi: பூகம்பமாக வெடித்த பிரச்சனை.. வீட்டை விட்டு வெளியேரும் எழில்! - முழு தகவல்கள் இதோ. இந்த பட்டியலில் பாக்கியலட்சுமி சீரியலின் இந்த வார ப்ரோமோ அப்டேட் மற்றும் சுவாரசியம் நிறைந்த தகவல்கள் விரிவாக பட்டியலிடப்பட்டுள்ளது. எழில் தொடர்புடைய பிரச்சனைகள் பாக்கியா வீட்டில் பூகம்பமாக வெடிக்க அதனை சமாளிக்க முடியாமல் பாக்கியா எழிலை வீட்டை விட்டு போ என சொல்லும் தருணம் உருவாகியுள்ளது. இதனை பற்றிய முழு தகவல்கள் இதோ.


cover image
Video Thumbnail

பாக்கியலட்சுமி - பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி -  தமிழ் சின்னத்திரை சீரியலில் பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் பேசப்படும் சீரியல், பாக்கியலட்சுமி. ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலின் இந்த வார ப்ரோமோ அப்டேட் மற்றும் கதைக்களம் தகவல்கள் இங்கு விரிவாக பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த வாரத்திற்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி ரசிகர்களின் கவனத்தை கவர்ந்துள்ளது. 

Video Thumbnail

இதுவரை - இதுவரை

பாக்கியலட்சுமி சீரியலில் பல நாட்களாக பேசப்பட்டு வந்த கோபியின் பஞ்சாயத்து முடிவுக்கு வந்த நிலையில், அடுத்ததாக எழில் பிரச்சனையை தொடங்கியுள்ளனர், படக்குழுவினர். சரியான சினிமா வாய்ப்பு இல்லாமல் தவிக்கும் எழில் எங்கு சென்றாலும் நிராகரிக்க படுவதால் அவருக்கான ஒரு வாய்ப்பு கிடைக்காமல் இருக்கிறது. இதனால் வீட்டில் பல பிரச்சனைகளை சந்திக்க சூழ்நிலை உருவாகி வருகிறது.


Video Thumbnail

எழில் - எழில்

எழில் தன்னை விரும்பிய ஒரு தயாரிப்பாளர் மகளை விட்டு திருமணம் மண்டபத்தில் தான் காதலித்த பெண்ணை திருமணம் கொண்டார். இதற்காக பல வழிகளில் பிரச்சனைகளை சந்தித்து வரும்  இவர், தொழில் ரீதியாக இவரின் அடுத்த படத்திற்கு நேரடியாக பிரச்சனைகள் எழுகிறது. இதனால் வீட்டில் உள்ள பலருடன் சண்டை ஏற்படுகிறது.


Video Thumbnail

ஈஸ்வரி ஆவேசம் - ஈஸ்வரி ஆவேசம்

பாக்கியாவிற்கு வீட்டு செலவு என்று மூத்த மகன் செழியன் பணம் கொடுப்பதை கண்ட ஈஸ்வரி, எழில் தனது பங்கிற்கு பணம் கொடுக்க வேண்டும் என அதட்டுகிறார். தற்போது படவாய்ப்பு இல்லாமல் தவிக்கும் எழில் விரைவில் தான் இயக்குனராக அடுத்த படம் இயக்கும் நேரத்தில் பணம் கொடுப்பான் என வீட்டில் உள்ளவர்கள் ஆறுதலாக பேச, எழில் திருமணம் செய்த பெண்ணின் ராசிதான் இதற்கு காரணம் என சொல்லி, சண்டையை பெரிதாக மாற்றுகிறார், ஈஸ்வரி.


Video Thumbnail

வீட்டை விட்டு வெளியேறும் எழில் - வீட்டை விட்டு வெளியேறும் எழில்

வீட்டில் உள்ள பிரச்சனைகள் பெரிதாக, எழில் மனைவியை சீக்கிரம் குழந்தை பெத்துக்க, இந்த வீட்டு வாரிசு உனக்கு வேண்டும் என சொல்கிறார், ஈஸ்வரி. இதனை அறிந்த எழில் கோபத்துடன் ஈஸ்வரியை கேட்க அதற்கு ஈஸ்வரி நான் அப்படி தான் சொல்வேன், என எல்லை மீறி எழில் மற்றும் அவரது மனைவியை அவமானப்படுத்துகிறார். இதனை கண்ட பாக்கியா எழிலை வீட்டைவிட்டு போ என சொல்கிறார்.


எழில் தனது மனைவி குழந்தைகளுடன் இணைந்து வீட்டை விட்டு வெளியேறுகிறார். பாக்கியாவின் செல்ல மகன் எழில் வீட்டைவிட்டு செல்வதை கண்ட பாக்கியா பெரும் துயரத்தில் உள்ளார்.


Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+