X
முகப்பு சினி தரவரிசை

Pandian Stores 2: புதிய சிக்கலில் சரவணன் - தங்கமயில் திருமணம்... கோமாளியாக மாறும் பாண்டியன்

Author Sakthi Harinath | Published: Tuesday, May 14, 2024, 10:37 AM [IST]

Pandian Stores 2: புதிய சிக்கலில் சரவணன் - தங்கமயில் திருமணம்... கோமாளியாக மாறும் பாண்டியன் - முழு விவரங்கள் இதோ. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் தற்போது சரவணன் - தங்க மயில் திருமணம் நடக்குமா? நடக்காத? என்ற பரபரப்பில் நகர்ந்து கொண்டு இருக்கிறது. இதன் தொடர்பாக இந்த வாரத்திற்கான பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 ப்ரோமோ வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பேசப்படுகிறது. முழு தகவல்கள் இங்கு விரிவாக உள்ளது. இதோ.


cover image
Video Thumbnail

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

பாண்டியன் ஸ்டோர்ஸ் - ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் வாரந்தோறும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல் ஆகும். இந்த சீரியல் தொடர் தமிழ் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த சீரியலின் இந்த வாரம் ப்ரோமோ வீடியோ ஸ்டார் விஜய் யூ டியூப் செயலியில் வெளியாகி பல ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.


Video Thumbnail

இதுவரை - இதுவரை

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் ராஜி - கதிர் இடையே புரிதல்கள் தொடங்கி இவர்களுக்குள் காதல் மலர ஆரம்பம் ஆகியுள்ளது. மீனா - செந்தில் இடையே கருத்து வேறுபாடுகள் குறைந்து ஒருவருக்கு ஒருவர் அனுசரித்து வாழ தொடங்கியுள்ளனர். பாண்டியன் தனது முதல் மகன் சரவணனுக்கு திருமணம் ஏற்பாடுகள் செய்து வரும் நிலையில் பெண் வீட்டாரின் பொய்யான முகமூடியை பற்றிய உண்மையை அறியும் நிகழ்வுகள் வரவிருக்கிறது.


Video Thumbnail

இந்த வார ப்ரோமோ - இந்த வார ப்ரோமோ

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வீடியோவில் பாண்டியன் தனது குடும்பத்தினர் அனைவரையும் அழைத்து கொண்டு மூத்த மகன் சரவணனின் நிச்சியத்திற்காக பெண் வீட்டிற்கு செல்கிறார். அங்கு பெண் வீட்டார் வாங்கிய கடனுக்காக அங்கு வந்து அமர்ந்துள்ளனர், கடன் கொடுத்தவர்கள். இந்த விஷயம் பாண்டியன் அறிந்ததும் திருமணம் தடை பெறுமா? என்ற கேள்விகளுடன் இந்த வார ப்ரோமோ வீடியோ வெளியிட்டுள்ளனர், குழுவினர்.


Video Thumbnail

சரவணன் - தங்கமயில் - சரவணன் - தங்கமயில்

பெற்றோர்கள் முடிவு செய்த திருமணமாக அமைந்து, சரவணன் - தங்கமயில் இடையே ஒரு நல்ல புரிதல் தொடங்கி காதலர்களாக மாறியுள்ளனர். இவர்களது திருமணத்தில் பெண் வீட்டார் சொல்லிய பொய் தான் தடையாக மாறியுள்ளது. கடன் வாங்கி திருமணம் செய்யும் பெண் வீட்டார், நிச்சியம் நடக்கும் நாளில் கடன் கொடுத்த நபர்கள் திருமணத்தை நிறுத்துவதற்காக நிச்சியம் வீட்டில் அமர்ந்துள்ளனர். இதனை பற்றி அறியாத பாண்டியன் குடும்பம் நிச்சியத்திற்கு வர அங்கு நல்ல முறையில் நிச்சியம் நடைபெற்று திருமணம் நடைபெறுமா என்ற கேள்விதான் பல ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது.


ஒரு காதல் தோல்வி, பல முறை பெண் பார்க்க சென்று சிலர் சூழ்ச்சியில் அசிங்கப்பட்டு வீடு திரும்பிய சரவணன் வாழ்க்கையில் ஒரு வழியாக திருமணம் நடக்க போகிறது, ஆனால் அந்த திருமணத்தில் இத்தனை பிரச்னைகளா?


Video Thumbnail

கோமாளியாக மாறும் பாண்டியன் - கோமாளியாக மாறும் பாண்டியன்

பெண் வீட்டாருக்கு உள்ள கடன் சுமை பற்றிய உண்மையை அறியும் பாண்டியன், அந்த கடனுக்கு நான் பொறுப்பு என்று சொல்லி கோமாளியாக மாறுவாரா? என்ற கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.


இந்த சீரியலில் ஒரு அமைதியாக தான் உண்டு தனது வேலை உண்டு என இருக்கும் பாண்டியன், தானாகவே பலரின் பிரச்சனையில் சிக்கி அவர்களது பிரச்சனைகளுக்கு தான் பொறுப்பேற்று இருந்து வருகிறார். அதனால் சரவணனின் திருமணத்திற்காக பெண் வீட்டாரின் கடன் சுமையை தான் சுமந்து கோமாளியாக மாறுவார் என பலர் கணித்துள்ளனர்.


Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+