மீண்டும் படவாய்ப்பை இழக்கும் சிலம்பரசன், காரணம் இதோ
பல போராட்டங்களுக்கு பின் மீண்டும் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு அங்கீகாரத்தினை பெற்ற சிம்பு, தற்போது மீண்டும் பட வாய்ப்பின்றி பின்னுக்கு தள்ளப்படுகிறார், முழு விவரங்கள் இதோ.
Sakthi Harinath M
மன்மதன், வல்லவன், மாநாடு என பல வெற்றி படங்களை கொடுத்து மக்களால் கொண்டாடப்படுபவர், சிலம்பரசன்.
லிட்டில் சூப்பர் ஸ்டார், எஸ் டி ஆர், சிம்பு, சிலம்பரசன் என இவருக்கு திரையுலகில் பல பெயர்கள் உண்டு.
இவரது நடிப்பில் சமீபத்தில் 'வெந்து தணிந்தது காடு' திரைப்படம் வெளியாகி தமிழ் சினிமாவில் சூப்பர் ஹிட் ஆனது.
மாநாடு, வெந்து தணிந்து காடு என சிலம்பரசனின் படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது. இதனால் இவர் தன் சம்பளத்தை உயர்த்தியுள்ளார்.
தற்போது சிலம்பரசன் தனது சம்பளத்தை 35 கோடிகளாக உயர்த்தியுள்ளார்.
இவரது நடிப்பில் அடுத்தடுத்து பத்து தல, விண்ணைத்தாண்டி வருவாயா 2, கொரோனா குமாரு என்னும் படங்கள் உருவாக உள்ளது.
சம்பளத்தை உயர்த்திய காரணத்தால் தயாரிப்பாளர்கள் சிம்புவோடு சம்பளத்தை குறைக்க பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.
சிலம்பரசன் சம்பள விவகாரத்தில் உறுதியாக இருப்பதால், சிம்பு-விற்கு எழுதப்பட்ட கதைகளில் வேறு நடிகர்களை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளனர், தயாரிப்பாளர்கள்
இந்த விவகாரத்தால் மீண்டும் படவாய்ப்பினை இழக்கிறார், சிலம்பரசன்.
தமிழ் சினிமா பற்றிய பல சுவாரஸ்ய தகவல்கள் அறிய மேல் நோக்கி swipe செய்யவும்