Tap to Read ➤

ராஷ்மிகாவுக்கு நோ சொன்ன காந்தாரா ஹீரோ ரிஷப்ஷெட்டி

தென்னிந்திய முன்னணி நடிகைகளில் ஒருவரான ராஷ்மிகாவை, அவரது தாய் மண்ணிலே நிராகரிக்கின்றனர், முழு விவரங்கள் இதோ.
Sakthi Harinath M
கன்னட சினிமாவில் 2016ம் ஆண்டு வெளியான கிரிக் பார்ட்டி படம் மூலம் அறிமுகமானவர், ராஷ்மிகா மந்தனா.
தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடித்த கீதா கோவிந்தம் படம் மூலம் டாப் ஹீரோயினாக மாறினார்.
அடுத்தடுத்து புஷ்பா, சுல்தான், மிஷன் மஜ்னு, குட் பை என பல படங்களில் நடித்து ஒரு முன்னணி நடிகையாக உயர்ந்துள்ளார், ராஷ்மிகா.
இவர் தற்போது விஜய்யின் வாரிசு படத்தில் நாயகியாக நடித்து வருகிறார்.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய ராஷ்மிகா, தன் முதல் பட தயாரிப்பு நிறுவனமான ரக்‌ஷித் ஷெட்டியின் பரம்வா ஸ்டூடியோஸின் பெயரை சொல்லாமல் தட்டிக் கழித்தார்.
தான் தெலுங்கு மற்றும் ஹிந்தி திரையுலகில் சிறந்து விளங்குவதாக பெருமையாக பேசியுள்ளார்.
இந்நிலையில் ராஷ்மிகா கன்னட திரையுலகை அவமதித்து விட்டார் என பலர் இவருக்கு எதிராக திரும்பி உள்ளனர்.
ராஷ்மிகாவை அறிமுகப்படுத்திய பரம்வா தயாரிப்பு நிறுவனத்தையே ரக்‌ஷித் & ரிஷப் ஷெட்டி இணைந்து நடத்தியுள்ளனர்
பேட்டி ஒன்றில் பங்கேற்ற காந்தாரா ஹீரோ ரிஷப் ஷெட்டி, ராஷ்மிகா பற்றிய கேள்விக்கு எந்த பதிலும் சொல்லாமல் தட்டி கழித்துள்ளார்.
இதன் மூலம் ரிஷப் ஷெட்டியின் படங்களில் ராஷ்மிகா நாயகியாக நடிக்க வாய்ப்பில்லை என தெரிகிறது
Thanks For Reading
தமிழ் சினிமாவின் பல சுவாரஸ்ய தகவல்கள் பற்றி அறியவும்