Tap to Read ➤

ஸ்பைடர்மேன், பாகுபலி, புஷ்பா, கேஜிஎஃப்-2...இத்தனைப்படத்துக்கு குரல் க

பாஹுபலி, புஷ்பா, கேஜிஎஃப் பட ஹீரோக்களுக்கு குரல் கொடுத்தவர், ஹாலிவுட், பாலிவுட், டோலிவுட் என பல கதாநாயகர்களுக்கு குரல் கொடுப்பவர் டப்பிங் ஆர்டிஸ்ட் சேகர்.
Filmibeat Tamil
சமீபத்தில் வெளியான கேஜிஎஃப் -2 படம் ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்படுகிறது. தமிழ் ரசிகர்கள் படத்தின் வசனங்களை பெரிதும் ரசிக்கின்றனர்.
அந்தப்படத்தில் கதாநாயகன் யாஷ் பேசும் பல பஞ்சுகள் ரசிகர்களால் மிகவும் ரசிக்கப்பட்டது.
அந்த வசனத்தை கேட்டவர்கள் இதன் யாஷ் பேசும் சாயல் வேறு படத்தில் கேட்டதுபோல் இருக்கிறதே என சந்தேகித்தபோதுதான் தெரிந்தது பின்னனி பேசியவர் புஷ்பா படத்திலும் அல்லு அர்ஜுனுக்கு பின்னனி பேசியுள்ளார் என்பதே.
அவர் பெயர் சேகர். மொழிமாற்றப்படங்கள், தெலுங்கு, மலையாள, ஆங்கிலப்படங்களில் முக்கிய கதா பாத்திரங்களில் நீங்கள் ரசித்த குரல் இவருடையதுதான்.
டெட்புல் படத்தில் ஹீரோவுக்கு இவர்தான் குரல், ஆங்க்ரி பேர்ட்ஸ் படத்தில் ரெட்குருவி, சக்கு கேரக்டருக்கும் இவர்தான் குரல் கொடுத்துள்ளார்.
பாஹுபலி படத்தில் ”பெண்கள் மீது கை வைத்த வெட்டவேண்டியது விரல்களை அல்ல தலையை” என பிரபாஸுக்கு இவர் பேசிய வசனம் பிரபலம். 2 பாகங்களிலும் இவர்தான் குரல் கொடுத்துள்ளார். பிரபாஸுக்கு தொடர்ச்சியாக இவர்தான் குரல் கொடுத்து வருகிறார்.
அதுமட்டுமல்ல ஷாருக்கானின் படங்கள் அனைத்திற்கும் அச்சு அசலாக ஷாருக் கான் குரல்போலவே குரல் கொடுத்ததும் இவர்தான். சல்மான் கானுக்கும் இவர்தான் குரல் கொடுத்துள்ளார்.
அதுமட்டுமல்ல தோனியின் வாழ்க்கை வரலாற்றை எடுத்தபோது தோனி கேரக்டருக்கு குரல் கொடுத்தவர் இவர்தான்.
மகேஷ்பாபு, ராம் சரண், அல்லு அர்ஜுன், நாகார்ஜுனா, நானி உள்ளிட்ட முன்னணி தெலுங்கு ஹீரோக்களுக்கு இவர்தான் குரல். அனைவருக்கும் தமிழில் இவர் குரல்தான்.
அதேபோல் வில்லன் நடிகர்களுக்கும் இவர்தான் குரல் வேதாளம் படத்தில் ”சொன்னேன்ல அவன் ஓடி ஒளியற ஆள் இல்ல தேடி அடிக்கிற ஆள்” என பேசும் வசனமும், விவேகம் படத்தில் வில்லன் விவேக் ஓபராய்க்கு குரல் கொடுத்தவரும் இவர்தான்.
இவர் பேசியதில் முக்கியமான வசனம் கிரிஸ் ட்ரக்கருக்கு குரல் கொடுத்தவர் இவர்தான். வித்தியாசமாக இந்த குரல் இருக்கும். பத்மாவதி படத்தில் வில்லனுக்கு குரல் கொடுத்தவரும் இவர்தான்.
தமிழ் சினிமாவின் முன்னனி ஹீரோவான அஜித்துக்கும் இவர் கொடுத்துள்ளார் என்பதை நம்ப முடிகிறதா? ஆரம்பகாலத்தில் அஜித் நடித்த பவித்ரா படத்தில் அஜித்துக்காக இவர் கொடுத்துள்ளார்.
தற்போது வெளியாகி வெற்றிகரமாக ஓடும் கேஜிஎஃப், கேஜிஎஃப்-2 இரண்டிலும் யாஷுக்கு இவர்தான் குரல். பேர அடிச்சி டான் ஆனவன் இல்லடா, நான் அடிச்சதெல்லாம் டான் தாண்டா என்கிற வசனம் மிகப்பிரபலம்.
கார்ட்டூன் நெட்வர்க் ஜானி டெஸ்ட் கேரக்டருக்கும் இவர்தான் குரல் கொடுத்துள்ளார். இவர் சினிமாவிலும் நடித்துள்ளார்.
சீறு படத்திலும், என்னையறிந்தால் படத்திலும் போலீஸாக நடித்திருப்பார். திறமையான நடிகர்கள் பலர் இருந்தாலும் சேகர் ஒருவரே அவரவருக்கு ஏற்ற மாடுலேஷன், குரல் மாற்றி பேசுவது மிகப்பெரிய திறமைதான்.