Don't Miss!
- Finance AC வாங்கப் போறிங்களா? இந்த தவறை பண்ணிடாதீங்க.. முதல்ல இதை நோட் பண்ணுங்க!
- News சென்னைக்கு வரப்போகும் புல்லட் ரயிலை விடுங்க.. அதைவிட சிறப்பான சூப்பர் சம்பவம் இருக்கு.. இதை பாருங்க
- Sports இதுதான் கிரிக்கெட்.. அஷுதோஷ் சர்மாவிடம் கற்றுக் கொள்ள ஆவலாக உள்ளேன்.. சூர்யகுமாரே சொல்லிட்டாரு!
- Lifestyle இந்தியாவில் இன்றும் ராஜவாழ்க்கை வாழும் அரச குடும்பங்கள்..இவங்களுக்கு எங்க இருந்து இவ்வளவு பணம் வருது தெரியுமா?
- Technology புது ரூல்ஸ்.. தேர்தல் முடிந்ததும் அமல்.. இனி 24 மணி நேரம் தான்.. ரயில் டிக்கெட் சேவையில் 2 பெரிய மாற்றங்கள்!
- Automobiles போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
'ஒரு அதிர்வை ஏற்படுத்திவிட்டீர்கள்'... பரியேறும் பெருமாள் படத்தை பாராட்டிய ரஜினி....!
பரியேறும் பெருமாள் படத்தை பார்த்துவிட்டு, படக்குழுவை நடிகர் ரஜினிகாந்த் வெகுவாக பாராட்டினார்.
சென்னை: பரியேறும் பெருமாள் திரைப்படம் ஒரு நாவலைப் போல எடுக்கப்பட்டுள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இயக்குனர் பா.இரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி வெற்றி கரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் பரியேறும் பெருமாள்.
திரைத்துறை சார்ந்தவர்கள், அரசியல்வாதிகள் , விமர்சகர்கள், ஊடகங்கள் ரசிகர்கள், பொதுமக்கள் என அனைவரின் பாராட்டுக்களை பெற்ற பரியேறும் பெருமாள் படத்தை நடிகர் ரஜினிகாந்த் நேற்று பார்த்தார். தயாரிப்பாளர் இரஞ்சித் திடமும், இயக்குனர் மாரிசெல்வராஜிடமும் வாழ்த்துக்களை அவர் தெரிவித்தார்.
மேலும், "ஒரு நாவலைப்போல திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறீர்கள். பல இடங்களில் நான் சிலிர்த்துவிட்டேன், மிகவும் நெகிழ்ச்சியாக இருக்கிறது. ஒரு அதிர்வை ஏற்படுத்திவிட்டீர்கள். படக்குழுவினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்" என்று தனது பாராட்டுக்களையும் அவர் தெரிவித்தார்.
[குழந்தையை கொஞ்சி மகிழும் விஜய்... வைரலாக பரவும் க்யூட் வீடியோ!]
இதனிடையே நடிகர் சிவகார்த்திகேயனும் பரியேறும் பெருமாள் படத்துக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், "இதயத்தில் நிலைத்து நிற்கும் திரைப்படம் பரியேறும் பெருமாள். அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். இயக்குனர் மாரி செல்வராஜ் உள்ளிட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்" எனக் கூறியுள்ளார்.
ஏற்கனவே இப்படத்தை இயக்குனர் ஷங்கர் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.