ரவி மோகன் எவ்வளவு சப்போர்ட்டா இருப்பாரு தெரியுமா?.. பிரச்னைகளுக்கு மத்தியில் நல்ல விஷயம் சொன்ன நடிகர்
சென்னை: ரவி மோகன் எந்த சர்ச்சையிலும் சிக்காமல் இருந்தார். ஆனால் அவரது பெர்சனல் பிரச்னைகள் கடந்த சில வருடங்களாக பெரிய பேசுபொருளாகியிருக்கின்றன. சமீபத்தில்கூட செய்தியாளர் சந்திப்பு நடத்தி பல விஷயங்களை ஓபனாக பேசியிருந்தார். அவை அனைத்தும் விவாத பொருளாகின. இந்நிலையில் பிரபல நடிகர் அர்ஜுனன் சமீபத்தில் அளித்த பேட்டியில் ரவி மோகன் குறித்து ஓபனாக பேசியிருக்கிறார்.
தமிழ் சினிமாவில் பெரிய அளவில் சர்ச்சையில் சிக்காத நடிகர் என்ற பெயரை எடுத்தவர் ரவி மோகன். அதெல்லாம் 2024ஆம் ஆண்டு வரைக்கும்தான். அந்த வருடத்தில் அவர் வெளியிட்டிருந்த அறிவிப்பில், 'எதிர்கால நலன்களை கருதி நான் ஆர்த்தியிடமிருந்து விலகுகிறேன்' என குறிப்பிட்டிருந்தார். காதலித்து திருமணம் செய்துகொண்டவர் இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கிறாரே என பலரும் அதிர்ச்சியடைந்தார்கள்.

கெனிஷாவுடன் நெருக்கம்: ஆர்த்தியும், அவரது தாய் சுஜாதாவும்இந்தப் பிரச்னையை முடிக்கவும்; ரவியை சமாதானப்படுத்தவும் எவ்வளவோ முயற்சிகளை செய்தார்கள். ஆனால் ரவி உறுதியாக இருந்தார். எனவே இந்த விவாகரத்து விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கிறது. இதற்கிடையே பின்னணி பாடகி கெனிஷாவுடன் ஏற்பட்ட பழக்கம் நெருக்கமாக மாறியது. இரண்டு பேரும் விரைவில் திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார்கள் என்றும் தகவல்கள் தீயாக பரவின. அவர்களது நடவடிக்கையை பார்த்தாலும் அப்படித்தான் இருந்தது.
பிரிந்த ஜோடி?: ஆனால் கடந்த மாதத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்த கெனிஷா, 'நான் சென்னையை விட்டு வெளியேறுகிறேன். ரவிக்காக எவ்வளவோ போராடினேன். இனிமேல் அப்படி செய்யமாட்டேன். அவரது குடும்பத்தை நான் பிரிக்க்வில்லை' என பல விஷயங்களை கூறினார். உடனே ஆர்த்தியும், 'தூங்கிக்கொண்டிருக்கும் தாய் சிங்கத்தை தட்டி எழுப்பாதீர்கள்' என்று பதிலடி கொடுத்திருந்தார். இதனால் இந்த விஷயம் மீண்டும் பற்றி எரிய தொடங்கியது.
ரவி செய்தியாளர் சந்திப்பு: ஆர்த்தி தரப்பால்தான் கெனிஷா தன்னைவிட்டு பிரிந்துவிட்டதாக கருதிய ரவி; உடனடியாக செய்தியாளர்களை சந்தித்து கதறி அழுதபடி பேசினார். 'மகன்களுக்கு நான்தான் ஸ்கூல் ஃபீஸ் கட்டுகிறேன். அவர்களை பார்க்கக்கூட விடுவதில்லை. எனக்கு சூனியம் வைத்திருக்கிறார்கள். இட்லி நடிகையால்தான் என் வாழ்க்கை போய்விட்டது' என்று சகட்டுமேனிக்கு விளாசினார். உடனே குஷ்பூவும் இதற்கு பதிலடி கொடுத்திருந்தார்.
மன்னிப்பு கேட்ட ரவி மோகன்: இந்த பத்திரிகையாளர் சந்திப்பால் கடுப்பான ஆர்த்தியோ, 'நீதிமன்ற உத்தரவை மீறி ரவி மோகன் பத்திரிகையாளர் சந்திப்பு வைத்திருக்கிறார்' என மனுத்தாக்கல் செய்தார். அதனையடுத்து ரவி மோகனும் நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டார். எனவே அந்த வழக்கை முடித்து வைத்தார் நீதிபதி. விரைவில் இந்தப் பிரச்னைகளிலிருந்து வெளியே வந்து ரவி பழைய மாதிரி உற்சாகமாக இருக்க வேண்டும் என்பதுதான் பலரது ஆசை.
அர்ஜுனன் பேட்டி: இந்நிலையில் ரவி மோகனுடன் டிக் டிக் டிக் படத்தில் நடித்த அர்ஜுனன் சமீபத்தில் தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில் பேசிய அவர், "ரவி மோகன் தன்னுடன் நடக்கும் சப்போர்ட் ஆக்டர்ஸை கம்ஃபோட் ஸோனுக்குள் கொண்டு வந்துவிடுவார். அந்த விஷயத்தில் அவர் கமல் மாதிரி. தனி ஒருவன் படத்தைகூட பாருங்கள் வில்லன் கேரக்டர்தான் அதிகம் பேசப்பட்டது. ஆஃப் ஸ்க்ரீனில் நம்முடன் ரொம்ப நட்பாகிவிடுவார். அவரை முதலில் சந்தித்தபோது ஹலோ சார் என்று ஃபார்மலாக பேசினேன். அவரோ, 'டேய் இப்படி பேசினால் எப்படி என்கூட நடிப்ப.. வா டா ஃப்ரெண்ட்லியாக இருப்போம் என சொல்லி; என்னை திலக் ரமேஷை எல்லாம் அப்படி பார்த்துக்கொண்டார்" என்றார்.


Click it and Unblock the Notifications
