Don't Miss!
- News புதுக்கோட்டையிலிருந்து ஷர்மிளா.. அதென்ன வித்தியாசமான "வாசனை"? குழம்பி நின்ற சென்னை சூளைமேடு போலீஸ்
- Technology யாரும் நம்பமாற்றங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Finance ஆக்சிஸ் வங்கி சிஇஓ-க்கு அடித்தது யோகம்.. அடுத்த 3 வருடத்திற்கு ராஜ வாழ்க்கை..!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
சிம்புவுடன் ஜோடி சேரும் கேத்ரீன் தெரசா! டபுள் ஹீரோயின் பக்கா மாஸ்!
கேத்ரீன் தெரசா சிம்புவுடன் நடிக்கிறார்
சென்னை: சிம்புவுடன் ஜோடி சேர்கிறார் கேத்ரீன் தெரசா.
சிம்பு நடித்துள்ள செக்கச் சிவந்த வானம் திரைப்படம் இன்று ரிலீஸாகியுள்ளது. சிம்பு ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தோடு கொண்டாடி வருகின்றனர்.
சிம்பு தற்போது சுந்தர் சி இயக்கத்தில் "அத்தாரின்டிகி தாரேதி" என்ற தெலுங்கு படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் சமீபத்தில் தொடங்கியது. செம ஸ்டைலிஷாக சிம்பு காட்சியளிக்கும் புகைப்படங்கள் வெளியாகின. ஒரு பாடல் காட்சியை அங்கு படமாக்கிய அவர்கள் இன்று சென்னை திரும்புகின்றனர். படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு அடுத்த மாதம் ஹைதராபாத்தில் நடைபெற உள்ளது.
[எனக்கு டச் இல்லையா, யார் சொன்னது?: சிசிவி மூலம் மணிரத்னம் பொளேர்#CCV]
இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார் என செய்திகள் வெளியானது. தற்போது கேத்தரீன் தெரசாவும் ஜோடியாக நடிப்பது தெரிய வந்துள்ளது. முதல்முறையாக சிம்புவுடன் ஜோடி சேர்கிறார் கேத்ரீன் தெரசா. "அத்தாரின்டிகி தாரேதி" படத்தில் சமந்தா மற்றும் பிரணிதா நடித்திருந்தனர். அதில் யாருடைய கதாபாத்திரத்தில் கேத்ரீன் தெரசா நடிக்கிறார் எனத் தெரியவில்லை.
சுந்தர் சியின் கலகலப்பு 2 திரைப்படத்தில் ஏற்கனவே கேத்ரீன் தெரசா நடித்திருந்தார். தற்போது நீயா 2 திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.
சுந்தர் சியும் சிம்புவும் அடுத்தடுத்து படங்களில் பிசியாக உள்ளதால் இப்படத்தை சீக்கிரமாக முடித்துவிட திட்டமிட்டுள்ளனராம். சிம்பு அடுத்ததாக மாநாடு திரைப்படத்தில் நடிக்க உள்ளார். சுந்தர் சி விஷாலை வைத்து ஒரு படம் இயக்க உள்ளார்.