Don't Miss!
- News "சிங்கப்பூர், ஹாங்காங் எங்களுக்கு தடை விதிக்கவில்லை!" எவரெஸ்ட் பரபர விளக்கம்.. அப்போ என்ன பிரச்சினை?
- Sports ரஹானே தொடக்க வீரராக மாறியது ஏன்? சிஎஸ்கே பேட்டிங் வரிசையில் மாற்றம் வருகிறது.. மைக்கில் ஹஸி கருத்து
- Lifestyle மேஷத்தில் வரப்போகும் கஜலக்ஷ்மி யோகத்தால் இந்த 3 ராசிக்காரங்க வாழ்க்கையில் தொட்டதெல்லாம் பொன்னாக மாறப்போகுதாம்!
- Technology பட்ஜெட்ல பக்குவமா வாங்கலாம்.. ரூ.15000 விலைக்குள்.. பெஸ்ட் கேமரா.. பெர்ஃபார்மென்ஸ் Mobile.. எந்த மாடல்கள்?
- Automobiles ஒரு கிமீக்கு வெறும் ரூ3.3 தான் செலவு! 10 பேர் தாராளமா போகலாம்! டாடா மேஜிக் பை ஃப்யூயல் வந்தாச்சு!
- Finance ஓரே அறிவிப்பு, மொத்த முதலீட்டாளர்களுக்கும் ஹேப்பி..!! அம்பானி கொடுத்த டிவிடென்ட் சர்பரைஸ்..!
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
எனக்கு டச் இல்லையா, யார் சொன்னது?: சிசிவி மூலம் மணிரத்னம் பொளேர்#CCV
சென்னை: தன்னை விமர்சித்தவர்களுக்கு எல்லாம் செக்கச் சிவந்த வானம் படம் மூலம் தக்க பதிலடி கொடுத்துள்ளார் மணிரத்னம்.
இயக்குனர் மணிரத்னத்திற்கு டச் விட்டுப் போய்விட்டது. அவர் ஓய்வு பெற நேரம் வந்துவிட்டது. இது புரியாமல் சும்மா மொக்கை படங்களாக எடுத்து அடிவாங்கிக் கொண்டிருக்கிறார் என்று தொடர்ந்து விமர்சிக்கப்பட்டது.
[ செக்கச் சிவந்த வானம்: தெறிக்கவிடும் சிம்பு ரசிகர்கள் ]
விமர்சனங்கள் குறித்து அமைதியாக இருந்த மணிரத்னம் செக்கச் சிவந்த வானம் படம் மூலம் தக்க பதில் அளித்துள்ளார்.
விஜய் சேதுபதி
செக்கச் சிவந்த வானம் படத்தில் விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி, சிம்பு, அருண் விஜய், ஜோதிகா, அதிதி ராவ் ஹைதரி என்று ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இத்தனை பேருக்கு எப்படி முக்கியத்துவம் கொடுக்க முடியும். பழைய மணியாக இருந்தால் பரவாயில்லை தற்போதுள்ள மணியால் இது எல்லாம் முடியாது என்று விமர்சித்தவர்கள் இன்று படத்தை பார்த்துவிட்டு வாயடைத்து போயுள்ளனர்.
அருமை
என்னத்த செக்கச் சிவந்த வானம், என்னத்த மணிரத்னம் என்ற புலம்பலுடன் படம் பார்க்க சென்றவர்களால் ஒரு நொடி கூட கண்ணை வேறு எங்கும் திருப்ப முடியவில்லை. அந்த அளவுக்கு கதையுடன் ஒன்றிவிட்டார்கள். அனைத்து கதாபாத்திரங்களுக்கும் சமமான முக்கியத்துவம் அளித்துள்ளார் மணிரத்னம். இது மணியால் மட்டுமே முடியும் என்று பிளேட்டை மாற்றிப் போட்டுவிட்டனர்.
கலாய்
ஏ.ஆர். ரஹ்மான் பழைய மாதிரி இல்லை. அவரின் இசை பிடிபடவில்லை என்று சர்கார் பாடலை கேட்டு கலாய்த்தவர்கள் கூட இன்று அவரை பாராட்டியுள்ளனர். செக்கச் சிவந்த வானம் படம் மூலம் மணிரத்னம் மட்டும் அல்ல ரஹ்மானும் தான் அப்படியே தான் இருக்கிறேன் என்பதை நிரூபித்துள்ளார். மணி இஸ் பேக் என்ற தியேட்டரில் இருந்து வெளியே வருபவர்கள் கூறுகிறார்கள்.
போட்டி
படத்தில் அத்தனை நட்சத்திரங்கள் இருந்தும் விஜய் சேதுபதி தனித்து தெறிகிறார். நடிப்பில் அசத்தி ரசிகர்களை தன்னை கவனிக்க வைத்துள்ளார். எனக்கு யாரும் போட்டி அல்ல, நான் தான் எனக்கு போட்டி என்று சொல்லாமல் சொல்லியுள்ளார் அவர். அரவிந்த்சாமி, சிம்பு, அருண் விஜய், ஜோதிகா, பிரகாஷ்ராஜ், அதிதி என்று அனைவரும் தங்கள் கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
-
Thalaivar 171: ரோலக்ஸை விட தாறுமாறா இருக்கே.. தலைவர் 171 படத்தின் டைட்டில் இதுதானா? லோகேஷ் ட்வீட்!
-
அவசரத்துக்கு கேரவன்ல ஏறினேன்.. அந்த ஹீரோயினோட அம்மா விரட்டி விட்டாங்க.. நடிகை காயத்ரி ரேமா வேதனை!
-
Aadujeevitham: 25 நாட்கள்.. 150 கோடி ரூபாய் வசூல்.. ஆடு ஜீவிதம் படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!