twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஒரே மாதிரி நடித்தால் போரடிக்கும்..சவாலான ரோலில் நடிக்கவே விரும்கிறேன்..ரம்யா கிருஷ்ணன் பேட்டி!

    |

    சென்னை : நீலாம்பரி, சிவகாமி போன்ற சவாலான கதாபாத்திரத்தில் நடிக்கவே விரும்புவதாக ரம்யா கிருஷ்ணன் பேட்டியில் கூறியுள்ளார்.

    பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா,மைக் டைசன் அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியானத் திரைப்படம் லைகர்.

    மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகின இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் ஆகஸ்ட் மாதம் 25ந் தேதி வெளியானது.

    கோப்ரா பட பிரமோஷன்ஸ்.. அனைவரையும் சொக்க வைத்த மிருணாளினி ரவி!'

    லைகர்

    லைகர்

    குத்து சண்டையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தில் விஜய் தேவரகொண்ட குத்துச்சண்டை வீரராக நடித்துள்ளார். இதில் விஜய் தேவரகொண்டாவின் அம்மாவாக ரம்யா கிருஷ்ணன் நடித்திருந்தார். தெருவோரத்தில் டீ கடை நடத்தும் பெண்னாகவும், அடாவடி செய்வது, எட்டி உதைப்பது என கிட்டத்தட்ட ஒரு ரௌடிபோலவே நடித்திருந்தார் ரம்யா கிருஷ்ணன். இத்திரைப்படம் வெளியாகி படுமோசமான விமர்சனங்களை பெற்ற போதும்,ரம்யா கிருஷ்ணனின் நடிப்பு பாராட்டை பெற்றது.

    ரம்யா கிருஷ்ணன்

    ரம்யா கிருஷ்ணன்

    இந்நிலையில்,ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த ரம்யா கிருஷ்ணன், சினிமாவின் மீது மக்களுக்கு நிறைய எதிர்பார்ப்பு இருக்கிறது. மக்களின் புரிந்துணர்வுகளை இளம் தயாரிப்பாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இப்போதெல்லாம், ஒரு வில்லன், ஒரு ஹீரோ, ஒரு ஹீரோயின், இரண்டு சண்டை, டூயாட் பாடல்களை மக்கள் விரும்புவது இல்லை என்றார்.

    மூவருக்குமே சமமான ரோல்

    மூவருக்குமே சமமான ரோல்

    லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் உருவான 'விக்ரம்'படத்தில் கமல்ஹாசன், ஃபஹத் பாசில் மற்றும் விஜய் சேதுபதி ஆகிய மூன்று பேருக்கும் சமமான நடித்ததாகவும், மூவருக்குமே சமமான ரோல் கொடுத்துள்ளதாவும் இப்படிப்பட்ட வலுவான திரைப்படத்தையும், நன்றாக நடிக்கும் நடிகர்களையும் தான் ரசிகர்கள் விரும்புகிறார்கள் என்றார்.

    சவாலான ரோல்

    சவாலான ரோல்

    படையப்பா நீலாம்பரி, பாகுபலி சிவகாமி போன்ற ரோலில் தொடர்ந்து நடித்தால் போரடிக்கும், இதனால், சவாலா கதாபாத்திரங்கில் நடிப்பதை விரும்புவதாக கூறிய ரம்யா கிருஷ்ணன், இந்தி படங்களை விட தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் தான் நடிக்க விரும்புவதாகவும், இந்திபடங்களில் இருந்து தனக்கு வாய்ப்புகள் வந்ததாகவும் ஆனால் அதை தான் ஏற்றுக்கொள்ளவில்லை என நடிகை ரம்யா கிருஷ்ணன் கூறியுள்ளார். தற்போது, ரம்யா கிருஷ்ணன் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

    English summary
    Ramya Krishnan in a recent interview with a media house, she wants to play roles that are challenging
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X