Don't Miss!
- Automobiles ஏப்.1ம் தேதி முதல் சுங்ககட்டணம் உயர்கிறது! எங்கு, எவ்வளவு உயர்கிறது தெரியுமா?
- Sports 17 வயது சிறுவனின் கனவை உடைத்து எறிந்த ட்ராவிஸ் ஹெட்.. ஈவு இரக்கமே இல்லாமல் அடித்த உலகக்கோப்பை நாயகன்
- Lifestyle வீட்டில் ரொம்ப பழைய பால் இருக்கா? அதை கீழ ஊத்தி வேஸ்ட் பண்ணாதீங்க... அதை வைச்சு இவ்வளவு விஷயம் செய்யலாம்...!
- News உதயசூரியன் சின்னம் வேண்டாம்.. பம்பரம் இல்லை என்றாலும் பிரச்சனையில்லை.. துரை வைகோ உறுதி
- Finance 2047ல் இந்தியா வளர்ந்த நாடாக மாறுமா? அதைப் பற்றி பேசுவது கூட முட்டாள் தனம் - ரகுராம் ராஜன்
- Education ஜேஇஇ பிரதானத் தேர்வெழுதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி
- Technology கட்டண உயர்வு.. தூக்கி வாரிய வோடபோன்.. ரூ.202 ரீசார்ஜ்.. 13 ஓடிடி.. 400 சேனல்கள்.. டிவி டூ மொபைல்.. என்ன வருது!
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
சர்கார் ஷூட்டிங்கில் விஜய்க்காக வெளிநாட்டு நபரை அடிக்கப் போன வரலட்சுமி
சென்னை: சர்கார் ஷூட்டிங்கின் போது வெள்ளைக்காரரை அடிக்கப்போனதாக வரலட்சுமி தெரிவித்துள்ளார்.
ஒருவிரல் புரட்சியின் முன்னோட்டத்தைப் போல சர்கார் திரைப்படத்தின் ஆடியோ ரசிகர்கள், பிரபலங்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து டிஜிட்டல் முறையில் வெளியிடப்பட்டது.
சர்கார் இசை வெளியீட்டு விழாவில் பேசிய வரலட்சுமி, ரசிகர்களைப் பார்த்து உங்களைப் போல நானும் தளபதி ரசிகை தான் என உரக்கச் சொன்னார்.
விஜய்க்காக பலரிடம் சண்டை போட்டதாக தெரிவித்த வரலட்சுமி, லாஸ் வேகாஸில் ஷூட்டிங் நடந்து கொண்டிருந்த போது இடையூறு செய்த வெள்ளைக்காரர் ஒருவரை அடிக்கப் போனதாகவும், அப்போது படக்குழுவினர் சமாதானப்படுத்தியதாகவும் தெரிவித்தார். இப்படத்தில் வில்லியாக நடித்துள்ள வரலட்சுமி படப்பிடிப்பு தளத்திலும் ஆக்ஷனில் இறங்கியிருக்கிறார்.
[சர்கார் விழாவில் தர்ம சங்கடத்துக்கு ஆளான விஜய்: இப்படி பண்ணிட்டீங்களே பிரசன்னா]
தொடர்ந்து பேசிய கீர்த்தி சுரேஷ், சர்கார் திரைப்படத்திற்கு முன்பே முருகதாஸ் படத்தில் வாய்ப்பு வந்து தவறவிட்டதாகவும், அப்படி தவறவிட்டது சர்காருக்காக என நினைக்கும் போது பெருமையாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
போக்கிரி பட நூறாவது நாள் விழாவுக்கு கேரளா வந்தபோது விஜய்யை முதன் முதலில் போட்டோ எடுத்ததாகக் கூறிய கீர்த்தி, அப்போது செல்பியெல்லாம் கிடையாது. அன்று அவருடன் போட்டோ எடுத்திருந்தால் அது பொக்கிஷமாக இருந்திருக்கும் எனத் தெரிவித்தார்.