Don't Miss!
- Lifestyle
நீங்க நுங்கை விரும்பி சாப்பிடுபவரா? அப்ப உங்களுக்கு பல அதிசய நன்மைகள் காத்திருக்காம்...!
- Sports
எங்க கிட்டயும் படைகள் இருக்கு..கேஜிஎப் வசனத்தை பேசிய பாட் கம்மின்ஸ்..இந்திய அணிக்கு பாராட்டு
- News
செந்தில் முருகனுக்கு அதிமுகவில் முக்கிய பதவி.. ‘கைம்மாறு’ செய்யும் ஓபிஎஸ்.. அப்போ கன்ஃபார்மா?
- Technology
சூரியனில் அதிகரிக்கும் கருப்பு புள்ளிகளால் விஞ்ஞானிகள் பதட்டம்.! சூரிய புயல் அபாயம் உருவாகிறதா?
- Automobiles
மாருதியின் புதுமுக காரை டெலிவரி பெற்ற ஜப்பான் தூதரக தலைவர்! எந்த காருனு தெரிஞ்சா நீங்களும் வாங்க விரும்புவீங்க
- Finance
மார்ச் மாதம் கெடு.. அதானி குழுமத்திற்கு வந்த புதிய பிரச்சனை..!
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
புனித் ராஜ்குமார் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய யோகிபாபு!
சென்னை : நகைச்சுவை நடிகர் யோகிபாபு மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் அவர்களின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
புனித் ராஜ்குமாரின் இறுதி சடங்கில் பல நட்சத்திரங்கள் கலந்து கொண்ட நிலையில் தமிழக நடிகர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை.
திருமணம் சீரியல்ல நடித்து காதலித்து திருமணம் செய்து கொண்ட சூப்பர் ஜோடி.. வாழ்த்தும் ரசிகர்கள்!
இதையடுத்து, உதயநிதி ஸ்டாலின்,சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி, சூர்யா, விஷால் உள்ளிட்டோர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

புனித் ராஜ்குமார் மறைவு
46 வயதே ஆன பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார், அக்டோபர் 29ந் தேதி உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி நிலையில் விக்ரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்களின் தீவிர சிசிக்சை பலன் அளிக்காமல் மாலையில் உயிரிழந்தார். இவரின் மரண செய்தி ஒட்டு மொத்த திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

முழு அரசு மரியாதையுடன்
அவரது உடல் பொதுமக்கள், பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக பெங்களூருவில் உள்ள கன்டீரவா மைதானத்தில் வைக்கப்பட்டிருந்தது. அவருடைய உடலுக்கு ரசிகர்களும், பொதுமக்களும் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினார்கள். அவரது இறுதிச்சடங்கு முழு அரசு மரியாதையுடன் நடைபெற்றது.

யோகிபாபு அஞசலி
இந்நிலையில், நகைக்சுவை நடிகர் யோகிபாபு, மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் அவர்களின் நினைவிடத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். நடிகர் புனீத் ராஜ்குமாருக்கு அஞ்சலி செலுத்தும் புகைப்படத்தை யோகிபாபு தனது ஸ்டாகிரா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

நினைவஞ்சலி கூட்டத்தில்
கடந்த வாரம் நடைபெற்ற நினைவஞ்சலி கூட்டத்தில் கலந்து கொண்ட விஷால், புனீத்தின் மரணம் தன்னை மிகவும் பாதித்தாகவும், இரண்டு நான் தூங்காமல் கஷ்டப்பட்டதாகவும் கூறினார். மேலும், அவர் படிக்க வைத்து வரும் 1800 குழந்கைகளின் படிப்பு செலவை தான் ஏற்றுக்கொள்வதாகவும் கூறியிருந்தார். இதையடுத்து, புனித் ராஜ்குமாரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியிருந்தார்.