குடும்ப பிரச்சனை: தாடி பாலாஜி ஒன்னு சொல்கிறார், மனைவி வேறு விதமாகல்ல சொல்கிறார்
சென்னை: குடும்பத்தில் நடக்கும் சாதாரண சண்டையை தான் சிலர் ஊதி பெரிதாக்குகிறார்கள் என்று நடிகர் தாடி பாலாஜி தெரிவித்துள்ளார்.
நடிகர் தாடி பாலாஜி தன்னை சாதி பெயரை சொல்லி திட்டி, அடிப்பதாக மனைவி நித்யா மாதவரம் காவல் நிலையத்தில் கணவர் மீது புகார் அளித்துள்ளார்.

அவரின் கொடுமையை தாங்க முடியாமல் காவல் நிலையத்திற்கு வந்ததாக நித்யா கூறினார்.
சண்டை எல்லாம் ஒன்னும் இல்லை. எல்லா குடும்பத்திலும் நடக்கும் சாதாரண தகராறு தான். அதை போய் சிலர் ஊதி பெரிதாக்குகிறார்கள் என்று தாடி பாலாஜி தெரிவித்துள்ளார்.
பாலாஜியை காதலித்து திருமணம் செய்தேன். அவருக்கு குடிப்பழக்கம் இருப்பது திருமணத்திற்கு பிறகே தெரிய வந்தது. குடித்துவிட்டு என்னுடன் சண்டைபோட்டு அடிப்பார். காயம் அடைந்து மருத்துவமனையில் அட்மிட் கூட ஆகியிருக்கிறேன் என்கிறார் நித்யா.
Comments


Click it and Unblock the Notifications