Don't Miss!
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- News அண்ணாமலை வேட்பு மனுவில் செய்த 2 மிகப்பெரிய தவறு.. திமுக எதுவுமே பேசல.. கொந்தளித்த நாதக வழக்கறிஞர்!
- Technology Jio-வை பொலி போட்ட BSNL.. ரூ.600 க்கு 4000GB டேட்டா.. 125 Mbps ஸ்பீட்.. இலவச OTT.. 2 புதிய திட்டங்கள் அறிமுகம்!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
அரசியலில் குதித்த பிக் பாஸ் நித்யா.. பெண்கள் கட்சிக்கு தலைவரானார்!
தேசிய பெண்கள் கட்சியின் தமிழ்நாடு தலைவரானார் பிக் பாஸ் நித்யா.
சென்னை: தேசிய பெண்கள் கட்சியின் தமிழ்நாடு தலைவராக பிக் பாஸ் நித்யா நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரபல காமெடி நடிகர் பாலாஜி மனைவியான நித்யா, பிக் பாஸ் சீசன் 2 நிகழ்சியில் பங்கேற்று பிரபலம் அடைந்தார். தாடி பாலாஜியுடன் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வரும் அவர், அந்நிகழ்ச்சியில் பாலாஜியுடன் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. இவர்களுக்கு போஷிகா என்ற பெண் குழந்தை உள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகும், இருவருக்கும் இடையேயான கருத்து வேறுபாடு தீரவில்லை. அந்த நிகழ்ச்சியில் இருவருக்கும் இடையே நடந்த சண்டைகள், சமூக வலைதளங்களில் விவாத பொருளாக மாறியது. போட்டி முடிந்த பின்னர் பாலாஜியும் நித்யாவும் நட்புடன் பிரிந்து சென்றனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர், நித்யா சமூக பணிகளில் ஈடுபட்டு வருகிறார். குறிப்பாக பெண்கள் முன்னேற்றத்துக்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் மும்பையில் கடந்த வாரம் தொடங்கப்பட்ட தேசிய பெண்கள் கட்சியின் தமிழ்நாடு தலைவராக நித்யா நியமிக்கப்பட்டுள்ளார்.
ராம் சரணுக்காக கொள்கையை தளர்த்தும் நயன்தாரா?
சென்னையில் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது, இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். பெண்கள் முன்னேற்றம், பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு எதிராக குரல் கொடுப்பது உள்ளிட்டவை இந்த கட்சியின் முக்கிய நோக்கமாகும்.