Don't Miss!
- News "கள்ளச் சந்தையில் ஐபிஎல் டிக்கெட்".. CSK போட்டியின்போது 12 பேரை கொக்கி போட்டு தூக்கிய போலீசார்!
- Automobiles இது கார் இல்ல மிதக்கும் கப்பல்!! புதுசா வாங்கியிருக்கும் இந்த நடிகர் யாரென்று தெரிகிறதா?
- Lifestyle Constipation: மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து உடனே விடுபடணுமா? இந்த பானங்களை தினமும் குடிங்க..
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Finance மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்ய சரியான நேரம் எது? இதை நோட் பண்ணிக்கோங்க!
- Technology ரூ.56,999 க்கு அறிமுகமான OnePlus போனை ரூ.19,149 க்கு விற்கும் Amazon.. ஆல் ஏரியாவிலும் ஆர்டர் பறக்குது!
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ஆறு ஹீரோ.. ஆறு கதை… மாஸாக களமிறங்கும் சிம்புதேவன்: அப்போ ஹீரோயின்ஸும் ஆறா?
சென்னை: இயக்குனர் சிம்புதேவனின் படத்தில் ஆறு கதாநாயகர்கள் எனத் தெரிய வந்துள்ளது.
23 ஆம் புலிகேசி திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக 24 ஆம் புலிகேசி எடுக்கும் வேலையில் இறங்கினார் சிம்புதேவன். ஆனால் சில காரணங்களால் படப்பிடிப்பு பாதியில் நின்றுபோனது.
தற்போது வெங்கட் பிரபுவின் பிளாக் டிக்கெட் புரொடக்ஷன் தயாரிக்கும் படத்தை இயக்குகிறார். ஆரம்ப கட்ட வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், இப்படத்தில் ஆறு கதாநாயகர்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இப்படத்தில் வெங்கட் பிரபு அன்ட் கோ நடிகர்களான ஜெய், சிவா, பிரேம்ஜி மற்றும் வைபவ் நடிக்க உள்ளனர். பிக்பாஸ் போட்டியாளரான விஜயலட்சுமியும் நடிக்கிறார்.
[2 லட்டு போச்சே: எனக்கு மட்டும் ஏன் இப்படி?, நடிகை புலம்பல்]
இப்படத்தில் ஆறு கதாநாயகர்கள் எனவும், ஆறு கதைகள் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆறு பேருக்கும் இருக்கும் தனித் தனிக் கதைகள் ஒரு புள்ளியில் இணையும் வண்ணம் படம் இருக்குமாம்.
சிவா, ஜெய், வைபவ் உறுதியாகிவிட்ட நிலையில் மற்ற மூன்று கதாநாயகர்கள் யார் என்பதை விரைவில் அறிவிக்க உள்ளனர். ஆறு ஹீரோக்கள் என்றால் ஆறு ஹீரோயினும் இருப்பார்கள் என எதிர்பார்க்கலாம்.