Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
#2.0... ரஜினி, ஷங்கர், அக்ஷய்குமார்... ஆர்வத்தை தூண்டும் ஐந்து விஷயங்கள்!
ரஜினி நடிப்பில் ஷங்கர் இயக்கியுள்ள #2.0 படத்தை காண நிறைய காரணங்கள் இருக்கின்றன.
Recommended Video
சென்னை: ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நாயகனாக நடித்துள்ள 2.0 படம் இன்று ரிலீசாகியுள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு சுமார் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்றது. தமிழ் சினிமாவில் அதிக பொருட்செலவில் உருவாகியுள்ள திரைப்படம் என்ற பெருமையுடன் உலகம் முழுவதும் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேலான தியேட்டர்களில் இப்படம் ரிலீசாகியுள்ளது.
இப்படத்தைக் காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். இந்நிலையில், இப்படத்தை மக்கள் ஆர்வமுடன் எதிர்பார்க்க இதோ சில காரணங்கள்...
ரஜினி:
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லா வயதுப் பிரிவிலும் ரஜினிக்கென்று ரசிகர்கள் உள்ளனர். அவர்கள் அனைவரின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்வது போல் தன் படம் இருக்க வேண்டும் என ரஜினி கவனமாக படங்களைத் தேர்வு செய்கிறார். அந்தவகையில் ரஜினி எனும் பெயருக்காகவே இப்படத்தைப் பார்க்க ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
[வாவ் ரஜினி.. சூப்பர் எமி.. வெறித்தனமான அக்ஷய்.. #2.0. மினி விமர்சனம்! ]
ஷங்கர்:
பிரமாண்டத்திற்குப் பேர் போன இயக்குநர் என பெயரெடுத்தவர் ஷங்கர். தனது ஒவ்வொரு படங்களிலும் ஏதாவது ஒரு சமூகப் பிரச்சினையை முன்னெடுத்து கதைக்களம் அமைத்து வருபவர். அதோடு ஹாலிவுட் படங்களுக்கு இணையாக தமிழ்ப் படங்களும் உருவாக வேண்டும் என்ற எண்ணத்தில், ஓவ்வொரு படத்திலும் தொழில்நுட்ப புதுமைகளை அறிமுகம் செய்து வருபவர். அந்தவகையில், இப்படத்திலும் பல புதிய விசயங்கள் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.
அக்ஷய்குமார்:
பிரபல பாலிவுட் நடிகரான அக்ஷய்குமார் தமிழில் இப்படத்தின் மூலம் அறிமுகமாகிறார். சிறந்த நடிகர் எனப் பெயரெடுத்த அவர், இப்படத்தில் மிரட்டல் வில்லனாக நடித்திருக்கிறார். இப்பட வெற்றியைத் தொடர்ந்து தமிழில் அவருக்கு நிச்சயம் பட வாய்ப்புகள் அமையும் என எதிர்பார்க்கலாம்.
பிரமாண்டம்:
ஷங்கர் படம் என்றாலே பிரமாண்டத்திற்கு குறைவிருக்காது. ஒவ்வொரு காட்சியிலும், ஒவ்வொரு ஷாட்டிலும் பிரமாண்டத்தால் மிரட்டியிருப்பார். இப்படத்திலும் அதுபோன்ற காட்சிகள் இருப்பது டிரெய்லரில் உறுதியாகியுள்ளது. டிரெய்லரிலேயே இத்தனை மிரட்டல் என்றால் படம் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே உள்ளது.
பட்ஜெட்:
லைகா தயாரித்துள்ள இப்படத்தின் செலவு ரூ. 500 கோடி எனக் கூறப்படுகிறது. இப்படம் முதல் நாளில் ரூ. 100 கோடி வசூலைத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியில் மட்டும் முதல் நாளில் ரூ. 35 கோடி வசூலாகலாம் எனக் கூறப்படுகிறது. இதன்மூலம் பாகுபலி 2வின் சாதனை முறியடிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது குறிப்பிடத்தக்கது.