Don't Miss!
- Finance சிங்கிளாக வாழும் பெண்களே.. இதை பாலோ பண்ணுங்க..!!
- News பிரியாணியால் வம்பில் மாட்டிய பிரேமலதா.. திடீரென பறந்த புகார்.. விஜயகாந்த் நினைவிடத்தில் என்ன நடந்தது
- Automobiles எல்லாரும் ஃப்ளோரிடாவுக்கு கிளம்ப போறாங்க.. ரோல்ஸ் ராய்ஸ் காரை இலவசமா தர போறாங்களாம்!! ஒரே ஒரு நிபந்தனைதான்!
- Lifestyle Today Rasi Palan 19 March 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பிறர் பிரச்சனையில் தலையிடுவதைத் தவிர்ப்பது நல்லது...
- Sports சிஎஸ்கே அணியின் படுமோசமான கேப்டன்கள் பட்டியல்.. தோனி கேப்டனா இருக்க காரணமே இதுதான்
- Technology புது SIM கார்டு ரூல்ஸ்.. இனி 7 நாட்களுக்கு ஒன்னுமே செய்ய முடியாது.. கஸ்டமர்கள் படப்போகும் பாடு.. எப்போது அமல்?
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
- Education தரமான கல்வியைத் தர உறுதி பூண்டுள்ள பிஎம் ஸ்ரீ பள்ளி திட்டம்...!!
ரஜினியின் ஜெயிலர் படத்தில் இணையும் ஜெய்?: சிவகார்த்திகேயனுக்கு பதிலாக தான் இவரா?
நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது.
'ஜெயிலர்' படத்தில் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன், வசந்த் ரவி ஆகியோர் முதற்கட்டமாக இணைந்துள்ளனர்.
இவர்களைத் தொடர்ந்து நடிகர் ஜெய் ஒரு முக்கியமான கேரக்டரில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கிடுக்கிப்பிடி போட்ட தெலுங்கு திரையுலகம்..அநாவசிய செலவுகளை நடிகர் நடிகைகளே ஏற்க வேண்டும் என முடிவு'
பரபரப்பாக தொடங்கிய ஜெயிலர்
அண்ணாத்த படத்தை தொடர்ந்து ரஜினி தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். சன்பிக்சர்ஸ் தயாரிக்கும் ஜெயிலர், பிரம்மாண்டமாக உருவாகி வருவதாக சொல்லப்படுகிறது. இந்தப் படத்தின் சூட்டிங் தொடங்கியதை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு, அதில் நடிப்பவர்கள் குறித்தும் அப்டேட் கொடுத்தது. அதன்படி முதற்கட்டமாக ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன், வசந்த ரவி ஆகியோர் கமிட் ஆகியுள்ளனர்.
ரகசியமாக நடக்கும் படப்பிடிப்பு
ஜெயிலர் படப்பிடிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினி கலந்துகொண்டாரா இல்லையா என, இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. ஆனால், படப்பிடிப்பு மட்டும் ரகசியமாக நடைபெற்று வருவதாகத் தெரிகிறது. அதேபோல், ஜெயிலர் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் குறித்தும் எந்த தகவலும் இல்லை. ஆனால், ஐஸ்வர்யா ராய், பிரியங்கா மோகன், தமன்னா ஆகியோர் நடிக்கலாம் என சொல்லப்படுகிறது. இதனிடையே பருத்தி வீரனில் சித்தப்புவாக கலக்கிய பிரபல நடிகர் சரவணன், ஜெயிலர் படத்தில் நடிக்கவிருப்பதாக அப்டேட் வெளியாகியுள்ளது.
ரஜினியின் மகனாக நடிக்கும் ஜெய்?
நெல்சனின் நெருங்கிய நண்பரான சிவகார்த்திகேயன், ஜெயிலர் படத்தில் ரஜினிக்கு மகனாக நடிப்பதாக தகவல் வெளியாகி தீயாக பரவியிருந்தது. இந்நிலையில், தற்போது அந்த பாத்திரத்தில் சிவகார்த்திகேயனுக்கு பதில் ஜெய் நடிக்கலாம் என புதிய தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் படக்குழு தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அவர் ரஜினியின் மகனாக நடிக்கிறார் என்பது குறித்தும் உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை.
ஜெய்க்கு அடிக்குமா ஜாக்பாட்
'பகவதி' படத்தில் விஜய்யின் தம்பியாக நடித்து சினிமாவில் அறிமுகமான ஜெய், சென்னை 600028, எங்கேயும் எப்போதும், வடகறி, திருமணம் என்னும் நிக்காஹ், கலகலப்பு 2, குற்றம் குற்றமே, பட்டாம்பூச்சி போன்ற படங்களில் நடித்துள்ளார். இதுவரை ரஜினியுடன் நடிக்காத ஜெய், முதன்முறையாக ஜெயிலர் படத்தில் அவருடன் இணைவாரா என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.