Don't Miss!
- News
டெல்லியும் அண்ணாமலையும் ஆதரவு அளிக்கும் அணி தான் அதிமுக.. பட்டென சொன்ன வேலூர் இப்ராஹிம்! ஓஹோ..!
- Finance
ஏலத்திற்கு வந்த டயானா-வின் வெல்வெட் கவுன்.. விலை மட்டும் கேட்காதீங்க..!
- Lifestyle
ஆண்களே! நீங்க செக்ஸ் சாட் பண்ணும்போது... இந்த தப்ப மட்டும் தெரியமா கூட பண்ணாதீங்க...!
- Automobiles
புதிய இன்னோவா காரின் புக்கிங் திடீரென நிறுத்தம்... இனிமேல் கிடைக்காதா? டொயோட்டா செய்த காரியத்தால் கலக்கம்!
- Technology
அம்மாடி.! ரூ.14000 வரை தள்ளுபடியா? Samsung டேப்லெட் வாங்க பெஸ்ட் நேரம் இதான் டோய்.!
- Sports
இந்தியா வெல்ல சூர்யகுமார் அதை செய்யனும்.. வாசிங்டன் சுந்தர் அதிரடிக்கு காரணம் -தினேஷ் கார்த்திக்
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
அம்மா பக்கத்து அறையில் இருக்க நடிகையின் ஆடையை அவிழ்த்த இயக்குனர்
Recommended Video

மும்பை: அம்மா பக்கத்து அறையில் இருக்கும்போதே நடிகையின் ஆடையை அவிழ்த்து சில்மிஷம் செய்துள்ளார் பிரபல இயக்குனர் சஜித் கான்.
பாலிவுட் இயக்குனர் சஜித் கான் மீது 3 பெண்கள் பாலியல் புகார் தெரிவித்துள்ளனர். நடிகைகள், பெண் பத்திரிகையாளர் முன்பு தனது மர்ம உறுப்பை காட்டி அட்டகாசம் செய்துள்ளார்.
இந்நிலையில் நடிகை சிம்ரன் சுரி சஜித் கான் மீது புகார் தெரிவித்துள்ளார். அவர் சஜித் கான் பற்றி கூறியிருப்பதாவது,
[அமிதாபின் சில்மிஷம் எல்லாம் விரைவில் வெளியே வரும்: பிக் பாஸ் பிரபலம் பகீர்]

ஆடிஷன்
2012ம் ஆண்டு அந்த சம்பவம் நடந்தது. ஹிம்மத்வாலா படத்திற்கு நடிகர், நடிககைளை தேர்வு செய்து கொண்டிருந்தார். ஆடிஷனுக்காக தனது வீட்டிற்கு வருமாறு சஜித் கான் எனக்கு போன் செய்தார். நானும் அவர் வீட்டிற்கு சென்றேன். அவர் டிரெட்மில்லில் இருந்தார். என் உடம்பை பார், எவ்வளவு நன்றாக உள்ளது என்றார்.

இயக்குனர்
ஆடிஷனுக்கு வரச் சொல்லிவிட்டு இந்த சஜித் கான் ஏன் உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கிறார் என்று நினைத்தேன். சிறிது நேரத்தில் அவர் என்னை ஆடையை அவிழ்க்குமாறு கூறினார். நான் தான் இயக்குனர். உங்களின் உடம்பை பார்க்க வேண்டும் என்றார். நான் ஆடையை அவிழ்க்காமல் நின்று கொண்டிருந்தேன்.

வீடு
சஜித் கான் என் மேலாடை கீழே இழுத்து அவிழ்க்கப் பார்த்தார். உடம்பை காட்டு, இதில் என்ன இருக்கிறது என்றார். நான் அதிர்ச்சி அடைந்து அவரை திட்டத் துவங்கினேன். எனக்கு அழுகை வந்துவிட்டது. உடனே அவர் கத்தாதே, பக்கத்து அறையில் என் அம்மா இருக்கிறார். அவர் காதில் விழுந்துவிடப் போகிறது என்றார்.

சிம்ரன்
சஜித்
வீட்டில்
இருந்து
வெளியே
வந்த
நான்
என்
செல்போனில்
அவரின்
எண்ணை
நீக்கிவிட்டேன்.
ஆனால்
அவர்
ஒரு
மணிநேரத்தில்
எனக்கு
மீண்டும்
போன்
செய்து,
நாம்
சேர்ந்து
வேலை
செய்ய
வேண்டும்
என்றால்
ஒருவரையொருவர்
நன்கு
தெரிந்து
வைத்திருக்க
வேண்டும்
என்றார்.
நான்
அவரை
திட்டிவிட்டு
போன்
இணைப்பை
துண்டித்துவிட்டேன்.

பாதிப்பு
சஜித் பற்றி வெளியே சொல்ல வேண்டும் என்று 6 ஆண்டுகளாக நினைத்தேன். ஆனால் அவர் பெரிய ஆள். அவர் மீது நான் புகார் தெரிவித்தால் யாரும் கேட்க மாட்டார்கள். அவரால் பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சஜித் பற்றி நடிகைகள் சலோனி சோப்ரா, ரேச்சல் ஒயிட் புகார் தெரிவித்ததை பார்த்து தான் எனக்கு தைரியம் வந்தது என்கிறார் சிம்ரன் சுரி.