சர்கார் கதை திருட்டு வழக்கு: வருண் ராஜேந்திரனுடன் சமரசம் செய்த சன் பிக்சர்ஸ்
Recommended Video

சென்னை: சர்கார் படத்தின் கதை தன்னுடையது தான் என்று கூறிய உதவி இயக்குனர் வருண் ராஜேந்திரனுடன் சமரசம் செய்யப்பட்டதால் பட ரிலீஸில் பிரச்சனை இல்லை.
சர்கார் படத்தின் கதை தன்னுடையது என்று உதவி இயக்குனர் வருண் ராஜேந்திரன் என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த கதை திருடப்பட்டது அல்ல என்று இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸும், எழுத்தாளர் ஜெயமோகனும் தெரிவித்தனர்.

கதை திருடப்பட்டது எழுத்தாளர் சங்க விசாரணையில் தெரிய வந்தது. இந்நிலையில் சர்கார் பட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. செங்கோல் படத்தின் கதை தான் சர்கார் கதை என்று கூறிய வருண் ராஜேந்திரனுடன் சன் பிக்சர்ஸ் நிறுவனம் சமரசம் செய்து கொண்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
மேலும் சர்கார் படத்தின் கதை வருணுடையது என்று முருகதாஸ் ஒப்புக் கொண்டதாகவும், அவருக்கு ரூ. 30 லட்சம் கொடுக்க முன்வந்துள்ளதாகவும், படத்தின் டைட்டில் கார்டில் நன்றி வருண் என்று போடவும் ஒப்புக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
[உளமாற வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்: மன்னிப்பு கேட்ட சிவகுமார்]
இதனால் சர்கார் பட ரிலீஸில் பிரச்சனை இருக்காது.


Click it and Unblock the Notifications











