Don't Miss!
- News போலி பத்திரங்களை ரத்து செய்ய முடியுமா, முடியாதா? உயர்நீதிமன்ற உத்தரவால் ஏற்பட்ட மாற்றம் என்ன?
- Technology தல தோனியே சொல்லிட்டார்.. இது Smartwatch இல்லை குட்டி போன்னு.. பார்க்கதான் காஸ்ட்லீ.. ஆன ரேட் ரொம்ப கம்மி..
- Sports 8 வருஷமாக ஆர்சிபிக்கு தொடரும் சோகம்.. கேகேஆர் செய்த மாஸ் சம்பவம்.. வரலாற்றை மாற்றுவாரா விராட் கோலி?
- Automobiles வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
- Lifestyle ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. சும்மா அள்ளும்...
- Finance மக்கள் அதிகம் வாங்குவதாலேயே தங்கம் விலை உயர்கிறதா..? உண்மை என்ன..?!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
எஸ்.ஐ. மனோஜ் தான் என் குடும்பத்தை நாசமாக்கிட்டார்: தாடி பாலாஜி பரபரப்பு புகார்
சென்னை: காவல் உதவி ஆய்வாளர் மனோஜ் குமார் என் குடும்பத்தை நாசமாக்கிவிட்டார் என்று தாடி பாலாஜி தெரிவித்துள்ளார்.
தாடி பாலாஜி தன்னை அடித்ததுடன், கொலை மிரட்டல் விடுப்பதாக நித்யா மாதவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்நிலையில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்பொழுது அவர் நித்யா பற்றி கூறியிருப்பதாவது,
குடும்பம்
காவல் உதவி ஆய்வாளர் மனோஜ் குமார் என் குடும்பத்தை நாசமாக்கிவிட்டார். என் மன உளைச்சலுக்கு அவர் தான் காரணம். அவரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும். நித்யா எங்கள் மகளை பகடைக்காயாக பயன்படுத்துகிறார். மகளின் கல்விச் செலவை ஏற்க நான் தயார். அவரை நல்ல பள்ளியில் சேர்த்து படிக்க வைக்க தயார். ஆனால் நித்யா என் மகளை பார்க்க அனுமதிப்பது இல்லை.
அரசியல்
தேர்தலில் நிற்பேன் என்கிறார் நித்யா. முதலில் அவர் வீட்டில் நிற்கட்டும். குடும்பத்தை கவனித்துக் கொள்ள முடியாத நித்யாவுக்கு நாட்டை பற்றி என்ன தெரியும், இல்லை அரசியலை பற்றி தான் அவருக்கு என்ன தெரியும். நித்யாவின் வளர்ச்சியை பார்த்து நான் பொறாமைப்பட அவர் என்ன முதல்வர் வேட்பாளராகவா அறிவிக்கப்பட்டுள்ளார்.
நித்யா
என் வேலை காரணமாக நான் பிசியாக இருப்பதால் கிடைத்த சுதந்திரத்தை நித்யா தவறாக பயன்படுத்திக் கொண்டார். அது ஏன் என்று நான் கேட்பதில் என்ன தவறு. நித்யாவால் பெண்கள் அமைப்புக்கு கேவலம். நித்யாவின் பின்னால் இருப்பது மனோஜ் தான்.
கமல் ஹாஸன்
நித்யா பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடித்தார். பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்ததும் நான் நேராக என் அம்மா வீட்டிற்கு சென்றேன். நித்யாவை பார்க்கவில்லை. அவர் பொய் பேசுகிறார். பணத் தேவைக்காக மட்டுமே நித்யா என்னிடம் பேசினார். என் வாழ்வில் நடப்பது பற்றி கமல் சாருக்கு தெரியும். கமல் சாரிடம் கூறிவிட்டு தான் செய்தியாளர்களை சந்திக்க வந்தேன் என்று தாடி பாலாஜி தெரிவித்துள்ளார்.
கொண்டாட வேண்டிய நேரத்தில் சமந்தாவுக்கும், த்ரிஷாவுக்கும் வந்த பிரச்சனை