Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
கிராமத் திருவிழாவில் ரசிகர்கள் துரத்தல்... சங்கவி ஓட்டம்!
பேராவூரணி நிலகண்ட பிள்ளையார் கோவில் சித்ரா பவுர்ணமி திருவிழா கடந்த 19-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது.
இந்த விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக நடிகை சங்கவியின் நடனத்துக்கு ஏற்பாடு செய்திருந்தனர். எனவே ஏராளமான ரசிகர்கள், கிராம மக்கள் குவிந்துவிட்டனர்.
ஆனால் இவர்களைக் கட்டுப்படுத்தப் போதிய போலீஸ் இல்லை. எனவே விழாவின் துவக்கத்திலிருந்தே பெண்களிடம் சில இளைஞர்கள் சில்மிஷம் செய்துள்ளனர். இதனால் கூச்சலும் குழப்பமுமாக இருந்தது.
இந்த நிலையில் சங்கவி நடனமாடுவார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அவரோ, நடனமாடாமல், ஒப்புக்கு கைகளை மட்டும் ஆட்டி பேசிவிட்டு மேடையை விட்டிறங்கிச் சென்றார். இதனால் கடுப்பான ரசிகர்கள் பெரும் கலாட்டாவில் இறங்கினர்.
ஒரு சில போலீசார் இதைக் கட்டுப்படுத்த முயன்ற போது கூட்டமாக சேர்ந்து கொண்டு போலீசாரை தாக்கியது ரசிகர் கூட்டம். பேரூராட்சி தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் விரைந்து சென்று போலீசாரை காப்பாற்ற வேண்டி வந்தது.
சங்கவியின் வாகனத்தை வழிமறிக்கவும் ஒரு கும்பல் முற்பட தப்பி்த்தால் போதும் என்று ஓட்டம் பிடித்தார் அவர்.
அதன் பிறகு மெல்ல மெல்ல கலாட்டா அடங்கியது.