Don't Miss!
- Finance ஸ்மார்ட் போன் வாங்கப் போறீங்களா? ரூ.60,000க்கு கீழ் கிடைக்கும் உயர்ரக பிராண்டட் போன்கள்..
- News தமிழ்நாட்டில் பாஜக வலுவாகிறது.. தேர்தல் முடிவுகள் ஆச்சரியத்தை ஏற்படுத்த போகிறது.. பிரதமர் மோடி
- Lifestyle இட்லி, தோசைக்கு ஒருமுறை இப்படி தக்காளியை குருமாவை செஞ்சு பாருங்க.. அடிக்கடி செய்வீங்க..
- Technology அதிரி புதிரி ஆர்டர்.. 66W சார்ஜிங்.. 64MP கேமரா.. AMOLED டிஸ்பிளே.. ஆஃபரில் விவோ போன்.. எந்த மாடல்?
- Automobiles பேடிஎம் ஃபாஸ்ட் டேக் கார்டுகளை இப்பவும் பயன்படுத்த முடியுமா? அதுல இருக்குற பணத்தை எடுப்பது எப்படி?
- Sports சிஎஸ்கே அணியின் படுமோசமான கேப்டன்கள் பட்டியல்.. தோனி கேப்டனா இருக்க காரணமே இதுதான்
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
- Education தரமான கல்வியைத் தர உறுதி பூண்டுள்ள பிஎம் ஸ்ரீ பள்ளி திட்டம்...!!
4 சுவற்றுக்குள் தீர்க்க வேண்டியதை பிக் பாஸில் ஊதிப் பெருசாக்கி நாறடிக்க வேண்டுமா?
Recommended Video
சென்னை: ஏற்கனவே மோதிக் கொண்டிருந்த கணவன், மனைவியை பிக் பாஸ் வீட்டிற்கு அழைத்து வந்து அவர்கள் எப்பொழுது மோதுவார்கள் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தினார்கள். இந்நிலையில் அவர்களின் மோதல் துவங்கிவிட்டது.
தாடி பாலாஜிக்கும், அவரின் மனைவி நித்யாவுக்கும் இடையே பிரச்சனை துவங்கிவிட்டது. பாலாஜி அடக்கி வாசித்தாலும், நித்யா நடந்து கொள்ளும் விதம் எரிச்சலை ஏற்படுத்துகிறது.
இது எல்லாம் நடக்கம் என்று தெரிந்து தான் அவர்களை பிக் பாஸ் வீட்டிற்கு அழைத்து வந்திருப்பார்களோ?
பாலாஜி
கணவன் மனைவி பிரச்சனை பற்றி மும்தாஜ் தாடி பாலாஜியிடம் பேசிய விதம் பாராட்டுக்குரியது. மெதுவாக பேசலாம். யாராவது வந்தால் டாப்பிக்கை மாற்றிவிடலாம். நிறையே பேர் வந்தால் அசிங்கமாகிவிடும் என்று மும்தாஜ் தாடி பாலாஜியிடம் தெரிவித்தார்.
நித்யா
நான் எதையும் மனதில் வைத்துக் கொண்டு கேரட் பொறியலில் வெங்காயம் போடுமாறு நித்யாவிடம் கூறவில்லை. அவராக ஏதாவது நினைத்துக் கொண்டு அடம்பிடித்தால் நான் பொறுப்பு இல்லை என்றார் பாலாஜி.
அறிவுரை
நித்யா இன்னும் உங்கள் மனைவி தான் அவருடன் அன்புடன் பேச முயற்சி செய்யுங்கள். நீங்கள் அவரிடம் தனியாக பேசினால் நன்றாக இருக்கும் என்று மும்தாஜ் கூறிய அறிவுரை அழகு.
கெஞ்சாதே
ரொம்ப கெஞ்சினால் மதிக்க மாட்டாங்க. நீங்க உங்க பாட்டுக்கு சிரித்து ஜாலியாக இருந்தால் என்னடா நாம் இல்லாமலேயே சந்தோஷமாக இருக்கிறாரே என்று நினைத்து மனம் மாறலாம். மாத்தி செய்து பார்க்கலாம் என்று மும்தாஜ் பாலாஜியிடம் தெரிவித்து உண்மை தான்.
விவாகரத்து
நித்யா முன்பு காட்டிக் கொள்ளாத பாலாஜி தனியாக வந்து அழுவது போன்று உட்கார்ந்திருந்தார். நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு நிலுவையில் இருக்க இப்படி ஒரு நிகழ்ச்சியில் கணவன், மனைவி மோதிக் கொள்வதை பார்க்க பரிதாபமாக உள்ளது.
தீர்வு
நான்கு சுவற்றுக்குள் தீர்க்க வேண்டிய கணவன், மனைவி பிரச்சனையை பஞ்சாயத்து பண்ண டிவி நிகழ்ச்சிகள் எதற்கு என்று கேட்கப்பட்ட நிலையில் பொழுதுபோக்கிற்காக அதை பயன்படுத்துவது சரியா? நீங்க தான் சொல்ல வேண்டும் வாசகர்களே.