வேணாம் பிக் பாஸ் வேணாம்: கதறிக் கதறி அழுத மும்தாஜ்
Recommended Video

சென்னை: ஒரேயொரு வார்த்தையால் தாடி பாலாஜியை கண் கலங்க வைத்துவிட்டார் நித்யா.
பிக் பாஸ் 2 வீட்டில் தற்போது அழுகாச்சி சீசன். ஆளாளுக்கு அழுது கொண்டிருக்கிறார்கள். ஒன்று சண்டை போடுகிறார்கள், இல்லை என்றால் அழுகிறார்கள்.
இந்நிலையில் அழுகாச்சி குறித்த ப்ரொமோ வீடியோக்கள் வெளியாகியுள்ளன.
நித்யா
நித்யா தனது கணவரான தாடி பாலாஜிக்கு எழுதிய கடிதத்தை ஜனனி வாசித்துக் காட்டினார். அதில் அவர் பாலாஜியை ஒருவரை முன்னால் விட்டு பின்னால் தவறாக பேச வேண்டாம் என்று தெரிவித்துள்ளார். மேலும் தங்களுக்கு இடையே நட்பு மட்டுமே என்று கடிதத்தில் தெளிவாக குறிப்பிட்டுள்ளார் நித்யா. இதை பார்த்த பாலாஜி ஓரமாக உட்கார்ந்து அழும் ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.
அம்மா
மற்றொரு ப்ரொமோ வீடியோவில் போட்டியாளர்களை ஃப்ரீஸ் செய்யச் சொல்லிவிட்டு ஜனனியின் அம்மா, தங்கையை வீட்டிற்குள் அனுப்பி வைத்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார் பிக் பாஸ். அவர்களை பார்த்ததும் ஓமை காட் என்று சொல்லி ஜனனி அழாதது ஆறுதல்.
கண்ணீர்
ஜனனி குடும்பத்தார் மட்டும் அல்ல மும்தாஜ் குடும்பத்தாரும் பிக் பாஸ் வீட்டிற்கு வந்தனர். அவர்கள் கிளம்பிச் சென்றபோது மும்தாஜ் எல்.கே.ஜி. குழந்தை போன்று அழுதார்.

இரண்டாவது சீசன்
முதல் சீசனில் பிக் பாஸ் வீட்டிற்கு வந்த சினேகனின் அப்பாவை பார்த்து போட்டியாளர்கள் அனைவரும் கதறி அழுதனர். இந்த சீசனிலும் பெற்றோரை வரவழைத்து போட்டியாளர்களை அழ வைத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











