X
முகப்பு சினி தரவரிசை

Baakiyalakshmi: சதியில் சிக்கி ஜெயிலுக்கு செல்லும் ஈஸ்வரி... செய்யாத கொலைக்கு கோபி சாட்சி

Author Sakthi Harinath | Published: Tuesday, July 9, 2024, 04:39 PM [IST]

Baakiyalakshmi: சதியில் சிக்கி ஜெயிலுக்கு செல்லும் ஈஸ்வரி... செய்யாத கொலைக்கு கோபி சாட்சி - முழு விவரங்கள் இதோ. இந்த பட்டியலில் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலின் இந்த வார ப்ரோமோ மற்றும் கதைக்களம் பற்றிய முழு அப்டேட் தகவல்கள் இங்கு உள்ளது. முழு தகவல்கள் இதோ.


cover image
Video Thumbnail

பாக்கியலட்சுமி - பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி - ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல்களில் ஒன்றான பாக்கியலட்சுமி தொடர் தற்போது பரபரப்பை அடைந்துள்ளது. பாக்கியாவியின் மாமியார் மீது சுமத்தப்பட்ட வீண் பழிக்கு ஜெயிலுக்கு செல்லும் அவலம் நேர்ந்துள்ளது. இதன் பற்றிய முழு தகவல்கள் இந்த சீரியலின் ப்ரோமோ அடிப்படையில் முழு விவரங்களாக இங்கு பட்டியலிடப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக பெரிய வரவேற்பு பெற்றுள்ள இந்த தொடர் பலரின் கவனத்தை கவர்ந்து பல விருதுகளை அள்ளிக்குவித்துள்ளது.

Video Thumbnail

கதை - கதை

பாக்கியலட்சுமி - இல்லத்தரசிகளின் கதை என்ற தலைப்பில் ஆரம்பான இந்த பாக்கியலட்சுமி தொடர், பல திருப்பங்கள் மற்றும் கதைக்களம் மாற்றம் என ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு பெற்ற சீரியலாக ஜொலித்து வருகிறது. ஒரு வீட்டில் நடக்கும் பிரச்சனைகள் மற்றும் பெண்களின் முன்னேற்றம் என பல விஷயங்கள் அடிப்படையில் உருவாகியுள்ள இந்த தொடர், பலமுறை TRP கணக்குகளில் முன்னிலை அடைந்துள்ளது.


Video Thumbnail

கைதான ஈஸ்வரி - கைதான ஈஸ்வரி

ராதிகா கர்பம் தரித்ததால் இந்த வயதில் குழந்தை வேண்டாம் என ராதிகாவிடம் வற்புறுத்திய ஈஸ்வரி, பின் கோபிக்காக அவருடன் வந்து தங்க முடிவு எடுக்கிறார். இதனை பொறுத்துக்கொள்ளாத ராதிகாவின் தாய் அவர் மீது வீண் பலி சுமத்தி வருகிறார். ஒரு கட்டத்தில் ராதிகா தவறுதலாக கீழே விழ அதற்கு ஈஸ்வரிதான் காரணம் என ஈஸ்வரி மீது பலி சுமத்தி விடுகின்றனர், ராதிகா மற்றும் அவரது தாய். பின் ஈஸ்வரி மீது போலீஸில் புகார் அளித்து அவரை கைது செய்ய வைக்கிறார், ராதிகாவின் தாய்.

Video Thumbnail

சாட்சி சொல்லும் கோபி - சாட்சி சொல்லும் கோபி

போலீஸ் விசாரணை முடித்து ஈஸ்வரியை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியுள்ளனர் போலீஸ், பிறகு நீதிமன்றத்தில் ராதிகாவின் தாய் மற்றும் ராதிகா இருவரும் பலமான வழக்கறிஞரை பொருத்தி தங்களுக்கு சாதகமாக வரும் படி திட்டம் செய்துள்ளனர். பிறகு சாட்சியாக அழைக்கப்பட்ட கோபி, ஆரம்பத்தில் கருவை கலைக்கும் படி ஈஸ்வரி சொன்னதை பற்றி சொல்லி, வழக்கை ஈஸ்வரிக்கு எதிராக மாற்றுகிறார்.


Video Thumbnail

ப்ரோமோ - ப்ரோமோ

இந்த வாரத்திற்கான ப்ரோமோ வீடியோவில் ஈஸ்வரிக்கு எதிராக வழக்கு நடப்பது போன்ற காட்சிகள் ஒளிபரப்பானது. இதற்கு பிறகு ஏதேனும் ட்விஸ்ட் அல்லது ஒரு ஆதாரம் கிடைத்து அதனை நீதிமன்றத்தில் கொடுத்து ஈஸ்வரியை பாக்கியா காப்பாற்றுவார் என்ற கதைக்களம் தான் நடக்க போகிறது என பலர் தங்களின் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+