X
முகப்பு சினி தரவரிசை

Baakiyalakshmi - அப்பனுக்கு தப்பாத பிள்ளை: பாக்கியலட்சுமி சீரியலில் கேள்விக்குறியான மூத்த மகன் வாழ்க்கை

Author Sakthi Harinath | Published: Tuesday, November 7, 2023, 11:32 PM [IST]

அப்பனுக்கு தப்பாத பிள்ளை: பாக்கியலட்சுமி சீரியலில் கேள்விக்குறியான மூத்த மகன் வாழ்க்கை. பாக்கியலட்சுமி சீரியலில் இந்த வாரம் நடக்கும் சுவாரஸ்யமான திரைக்கதை மற்றும் இந்த வாரம் எழுந்துள்ள பிரச்சனைகள் என இந்த பட்டியலில் விரிவாக உள்ளன. பாக்கியாவின் மூத்த மகன் செய்த சில விஷயங்கள் வெளியானதால் கேள்விக்குறியான செழியனின் வாழ்க்கை. இதனை பற்றிய முழு விவரங்கள் இங்கு உள்ளன. இதோ.


cover image

பாக்கியலட்சுமி - இயக்குனர் சிவா சேகர் மற்றும் டேவிட் இணைந்து இயக்கும் குடும்ப தொடர். இந்த சீரியலில் சுசித்ரா ஷெட்டி, சதிஷ் குமார், ரேஷ்மா, ரஞ்சித் என பல பிரபலங்கள் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 'பாக்கியலட்சுமி - இல்லத்தரசியின் கதை' என்ற தலைப்பில் உருவாகி வரும் இந்த சீரியல் பெரிய அளவில் ரசிகர்களின் வரவேற்பினை பெற்று கொண்டாடப்படுகிறது. இந்த சீரியலில் இந்த வாரம் நடக்கும் சுவாரஸ்யத்தை பற்றி விரிவாக இங்கு காணலாம், இதோ.


கோபியை மீண்டும் பாக்கியாவின் இல்லத்திற்கு அழைத்து வந்துள்ளார், பாக்கியாவின் மாமியார். இதனால் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது ராதிகா மீண்டும் கோபியோடு வாழ பாக்கியாவின் இல்லத்திற்கு வந்துள்ளார். இதனை கண்டித்து பலர் பேசினாலும் உறுதியாக கோபி & ராதிகா இருவரும் பாக்கியாவின் இல்லத்தில் தங்கி வருகின்றனர்.


எழில் காதலித்து திருமணம் செய்து கொண்ட அமீர்தா என்பவற்றின் மூத்த கணவர் உயிரோடு இருப்பதை அறியும் பாக்கியா, அவரை தடுத்து நிறுத்த ஒரே ஆளாக போராடி வருகிறார். அமீர்தாவின் மூத்த கணவர் மறைமுகமாக பாக்கியாவிற்கு எச்சரிக்கை விடுத்தும் அதனை சமாளிக்க முடியாமல் தடுமாற்றத்தில் உள்ளார், பாக்கியா.

செழியன் தான் வேலை செய்யும் அலுவலகத்தில் ஒரு பெண்ணோடு பழகி வந்துள்ளார். அந்த பழக்கம் அடுத்த கட்டத்திற்கு முன்னேற புதிய பிரச்சனையில் சிக்கியுள்ளார், செழியன். ஒவ்வொரு முறையும் செழியனை மிரட்டி தன்னோடு பழக வைத்து தனது வலையில் செழியனை சிக்கவைத்துள்ளார், ரேஷ்மா. செழியனுக்கு குழந்தை பிறந்ததும் செழியன் தன்னை விட்டு பிரிவதை உணர்ந்த ரேஷ்மா, செழியன் தன்னை ஏமாற்றியதாக பொய் சொல்லி ஜெனி - செழியன் இருவரையும் பிரித்துள்ளார், இதனால் பெரும் துயரத்தில் உள்ளனர், பாக்கிய குடும்பத்தினர்.

செழியனின் இந்த செயலை கண்ட ரசிகர்கள் 'அப்பனுக்கு தப்பாத பிள்ளை' என கோபியோடு ஒப்பிட்டு பல விமர்சனங்கள் வைக்கின்றனர். இந்த பிரச்சனையால் ஜெனி செழியனை விட்டு பிரிந்து வீட்டை விட்டு வெளியேறுகிறார். ரேஷ்மாவின் சூழ்ச்சியில் சிக்கிய செழியன் இதிலிருந்து மீள பாக்கியாவின் உதவியை கேட்க, பாக்கிய ரேஷ்மாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக முயற்சித்து அது பெரிய பிரச்சனையில் முடிந்துள்ளது. இதனால் குடுபத்தினர் அனைவரும் பாக்கிய மீது பெரும் அதிர்த்தியில் உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+