X
முகப்பு சினி தரவரிசை

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 - ஆரம்பமானது கதிர் & ராஜி காதல் கதை, புதிய பிரச்சனையில் பாண்டியன் குடும்பம்

Author Sakthi Harinath | Published: Monday, April 29, 2024, 05:48 PM [IST]

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 - ஆரம்பமானது கதிர் & ராஜி காதல் கதை, புதிய பிரச்சனையில் பாண்டியன் குடும்பம், விரிவான விவரங்கள் இதோ. பாண்டியன் ஸ்ட்ரோஸ் 2 தொடரில் தற்போது பரபரப்பான கதைக்களம் நகர்ந்து வருகிறது, பாண்டியனை தாக்கியதற்காக குமாரனை கதிர், சரவணன் தாக்கி ஜெயிலுக்கு சென்றால், அவர்களுக்கு ஆதரவாக தன் அண்ணனை எதிரித்து நின்ற ராஜி, கதிர் மற்றும் தன் குடும்பத்தினரை காப்பாற்றி உள்ளார். முழு தகவல்கள் இதோ.


cover image
Video Thumbnail

Pandiyan Stores 2 - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் பிரபல சீரியல், இந்த சீரியல் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இரண்டாவது தொடராக இயக்கியுள்ளார், விஜய் டிவி குழுவினர். இந்த சீரியலில் பரபரப்பிற்கு பஞ்சம் இல்லாமல் திரைக்கதை வடிவமைத்து உருவாக்கி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பினை அள்ளி உள்ளனர்.

Video Thumbnail

Raji and Kathir - ராஜி - கதிர்

பாண்டியனின் கடைக்குட்டி கதிர், ரத்னம் மகள் ராஜியை திருமணம் செய்து கொண்டார், ஏற்கனவே பகையாளியாக வாழ்ந்து வரும் இந்த இருவீட்டாரும் தற்போது முகம் திருப்பி கொண்டு வாழ்ந்து வருகின்றனர். பிடிக்காத திருமணம் செய்துகொண்ட இந்த இரண்டு நபர்களும் கொஞ்சம் கொஞ்சமாக தங்களின் இயல்பு வாழ்க்கையை நோக்கி பயணிக்கின்றனர். இதனால் இவர்களுக்கு இடையே ஒரு புரிதல் தொடங்கி காதலாக மாறி வருகிறது.


Video Thumbnail

Kumaran - குமரனின் கோவம்

தன் தங்கை செய்து கொண்டது காதல் திருமணம் என கோவத்தில் இருக்கும் குமரன், எதிர்பாராத விதமாக தாய்க்கு உதவும் நோக்கத்தில் வீட்டில் இருந்த ராஜியை கண்டு ஆத்திரம் கொள்கிறார். கோவத்தில் ராஜியை இழுத்து சென்று வீதியில் வீசி தாக்க தொடங்குகிறார், குமரன். ராஜியை காப்பாற்ற நினைத்து சண்டையை தடுத்து நிறுத்தும் பாண்டியனை தெரியாமல் குமரன் அடித்து விடுகிறார், இதனை அறிந்த பாண்டியன் மகன்கள் குமாரனை தாக்க திட்டம் தீட்டுகின்றனர்.


Video Thumbnail

pandian sons arrested - கைது செய்யப்பட்ட மகன்கள்

குமாரனை தாக்கிய குற்றத்திற்காக பாண்டியனின் மகன்களை காவலர்கள் கைது செய்ய பாண்டியன் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போகின்றனர். கதிர், செந்தில் மற்றும் சரவணனை விடுவிக்க முயற்சி செய்யும் பாண்டியன், ஒரு கட்டத்தில் செய்ய ஒரு வழியும் இல்லாமல் நிற்கிறார், அச்சமயம் நடந்த விவரத்தை எல்லாம் காவலர்களிடம் சொல்லி தனது கணவர் கதிர் மற்றும் கதிரின் அண்ணனை காப்பாற்றுகிறார், ராஜி.

Video Thumbnail

pandiyan happy - பாண்டியன் குஷி

ராஜியின் இந்த செயலை கண்ட பாண்டியன் பெரும் மகிழ்ச்சியில் உள்ளார். மறுபுறம் ராஜியை துரோகி என சொல்லி வசை பாடுகின்றனர், ராஜியின் தந்தை மற்றும் அண்ணன். ஜெயிலுக்கு செல்லாமல் வெளிவந்த பாண்டியனின் மகன்களை ஆறுதல் பேசி அவர்களை சமாதான படுத்தும் பாண்டியன், தனக்காக தன் பிள்ளைகள் செய்த காரியத்தை கண்டு பாச பூரிப்பில் உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+