X
முகப்பு சினி தரவரிசை

Pandian Stores 2: மூத்த மகனுக்கு மட்டும் தேன் நிலவு... பாண்டியனை விளாசும் கோமதி!

Author Sakthi Harinath | Published: Thursday, July 25, 2024, 05:40 PM [IST]

Pandian Stores 2: மூத்த மகனுக்கு மட்டும் தேன் நிலவு... பாண்டியனை விளாசும் கோமதி! - முழு விவரங்கள் இதோ. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 சீரியலின் லேட்டஸ்ட் எபிசோட் மற்றும் விறுவிறுப்பான கதைக்களம் பற்றிய முழு அப்டேட் விவரங்கள் இங்கு உள்ளது. மூத்த மகனை மட்டும் தேனிலவுக்கு அனுப்பும் பாண்டியன், மற்ற இருவரை நிராகரித்தது பற்றிய விவகாரம் தற்போது வீட்டில் இடியாக விழுகிறது. இதனை பற்றிய முழு விவரங்கள் இந்த பட்டியலில், இதோ.


cover image
Video Thumbnail

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 - ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது சீசன் தொடராக உருவாகி வருகிறது, பாண்டியன் ஸ்டோர்ஸ் 2. இந்த சீரியலில் முதல் பாகத்தை தொடர்ந்து ஸ்டாலின், மீனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் சீசன் 2 தொடரிலும் நடித்து வருகின்றனர். மேலும் இந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தொடரில் ஆகாஷ் பிரேம் குமார், வி ஜே கதிர்வெல், நிரோஷா என பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

Video Thumbnail

இதுவரை - இதுவரை

மூத்த மகன் சரவணன் இருக்க, இளைய மகன்கள் செந்தில் மற்றும் கதிர் இருவரும் மீனா மற்றும் ராஜி ஆகியோரை காதல் திருமணம் செய்துக்கொண்டனர். இதனால் படாதா பாடுபட்டு தந்தை பாண்டியன் மூத்த மகனுக்கு தங்கமயில் என்ற பெண்ணுடன் திருமணம் செய்து வைக்கிறார். புதிதாக திருமணமான தங்கமயில் பலரின் கவனத்தை ஈர்க்க, அதிகப்பிரசங்கி தனமாக பல விஷயங்களில் மூக்கை நுழைத்து பிரச்சனைகளை தொடங்கி வைத்துள்ளார்.


Video Thumbnail

தங்கமயில் நிபந்தனை - தங்கமயில் நிபந்தனை

சரவனுடன் ஏற்பட்ட ஒரு சின்ன சண்டையை பயன்படுத்தி தன்னை தேன் நிலவுக்கு அழைத்து செல்லவேண்டும் என நிபந்தனை போடுகிறார், தங்கமயில். இதனை எப்படி அப்பாவிடம் சொல்லி அனுமதி பெறலாம் என யோசிக்கும் சரவணனை கண்ட கதிர், அண்ணனுக்காக அப்பாவிடம் பேசி திட்டுவாங்குகிறார், கதிர். பின் சில ட்ராமா அரங்கேறிய பின், பாண்டியன் சரவணன் - தங்க மயில் இருவரையும் தேன் நிலவுக்கு அனுப்ப முடிவு செய்கிறார்.


Video Thumbnail

பிள்ளைகளுக்கு இடையே பிரிவினை - பிள்ளைகளுக்கு இடையே பிரிவினை

பாண்டியனின் முடிவை கண்ட பழனி, மூன்று பிள்ளைகளுக்கு திருமணம் ஆகிவிட்டதால், ஒரு ஜோடியை மட்டும் ஏன் தேன் நிலவுக்கு அனுப்பவேண்டும் என கேள்வி கேட்கிறார், பழனி. மூத்த மகன் சரவணன் மட்டும் தான் தனது விருப்பத்திற்கேற்ப திருமணம் செய்து கொண்டதால் அவனை மட்டும் அனுப்புகிறேன் என பாண்டியன் சொல்ல, அதனை கோமதியிடம் சொல்லி வருந்துகிறார், பழனி.

Video Thumbnail

பாண்டியனை விளாசும் கோமதி - பாண்டியனை விளாசும் கோமதி

பாண்டியன் ஸ்டோர்ஸ் கடைக்கு சென்ற கோமதி, மூன்று பிள்ளைகளும் திருமணம் செய்துள்ளனர், மூவரையும் நீங்கள் தேன் நிலவுக்கு அனுப்ப வேண்டும் என கேட்கிறார். அதற்கு சம்மதம் சொல்ல தயங்கும் பாண்டியனிடம், நமது பிள்ளைகள் மூவருக்கு இடையே பிரிவினை உண்டாக்குவது போல உங்கள் நடவெடிக்கை உள்ளது என பாண்டியனின் தவறை வெளிப்படையாக சொல்லி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார், கோமதி.


கோமதியின் நிலையை கண்ட பாண்டியன், சரவணன் - தங்கமயில் உடன் செந்தில் - மீனா மற்றும் கதிர் - ராஜி ஆகியோரையும் தேன் நிலவுக்கு அனுப்ப முடிவு செய்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+