X
முகப்பு சினி தரவரிசை

Pandiyan Stores 2: ராஜியின் மரியாதை காக்க பாண்டியனுக்கு பணம் கொடுத்து மாஸ் காட்டிய கதிர்..

Author Sakthi Harinath | Updated: Thursday, June 6, 2024, 02:28 PM [IST]

Pandiyan Stores 2: ராஜியின் மரியாதை காக்க பாண்டியனுக்கு பணம் கொடுத்து மாஸ் காட்டிய கதிர்- முழு விவரங்கள் இதோ. இந்த பட்டியலில் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 சீரியலில் இந்த வார நடக்கும் கதைக்களம் மற்றும் திருப்பங்கள் பற்றிய முழு விவரங்கள் உள்ளது. விரிவான தகவல்கள் இதோ.


cover image
Video Thumbnail

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 - ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியலான 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியல் திருமண வைபோகம் முடிந்து தற்போது மீண்டும் கதைக்களத்தில் பயணிக்கிறது. ஒரு கூட்டு குடும்ப கதைக்களத்தில் உருவாகும் இந்த சீரியல், பெரிய அளவில் ரசிகர்களின் மனதை வென்ற தொலைக்காட்சி சீரியல் ஆகும். முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது ஒளிபரப்பாகும் சீசன் 2 சீரியலில் பல முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளனர்.


Video Thumbnail

இதுவரை - இதுவரை

தனது மூத்த மகனான சரவணனுக்கு திருமணம் செய்து வைத்த பாண்டியன், தான் சொன்ன சவாலில் ஜெயித்துள்ளார். பல குழப்பங்கள் நிறைந்த இந்த திருமணத்தில் பல பிரச்சனையை சமாளித்து திருமணம் நடத்தியுள்ளார், பாண்டியன். மீண்டும் கடை போன்ற இயல்பான திரைக்கதைக்கு திரும்பியுள்ள பாண்டியன் குடும்பம், தற்போது பல பிரச்சனைகளுக்கு தயாராகி வருகிறது.


Video Thumbnail

சரவணன் - தங்கமயில் - சரவணன் - தங்கமயில்

பாண்டியனின் மூத்த மகனான சரவணன், தனது தந்தை சொல் கேட்டு தங்கமயில் (சரண்யா) என்பவரை திருமணம் செய்து கொண்டார். தங்கமயில் பல தில்லுமுல்லு செய்து சரவணனை திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர் ஏமாற்றிய விஷயங்கள் பாண்டியனுக்கும், சரவணனுக்கு தெரிய வரும் பொழுது பெரிய அளவில் பாண்டியன் வீட்டில் பூகம்பம் காத்திருக்கிறது.

Video Thumbnail

கதிர் - ராஜி - கதிர் - ராஜி

கோமதி (நிரோஷா) சொல் கேட்டு, ராஜியை திருமணம் செய்து கொண்ட கதிர், வெறுப்புடன் தனது திருமண வாழ்க்கையை வாழ தொடங்கினார். பின்னர் படிப்படியாக மனம் இறங்கி இந்த திருமணம் வாழ்க்கைக்கு தன்னை தயார் படுத்தி கொண்டு வருகிறார். காதல் திருமணம் என பலர் அறிந்தாலும், இவரின் இந்த வாழ்க்கை பெரிய பிரச்சனையில் நடந்துள்ளது.


Video Thumbnail

பாண்டியனுக்கு பணம் கொடுத்த கதிர் - பாண்டியனுக்கு பணம் கொடுத்த கதிர்

கல்லூரிக்கு செல்ல பணம் இல்லாமல் இருந்த ராஜியை கண்ட கோமதி, ராஜிக்காக பாண்டியனிடம் பணம் கேட்டுள்ளார். அதற்கு திருமணம் செய்ய தெரிந்தவர்கள் பணம் வைத்திருக்க வேண்டும் என சொல்லி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார், பாண்டியன். இதனால் மனம் உடைந்த ராஜி மௌனம் காத்து சகித்து வந்துள்ளார். இந்த விஷயங்களை அறிந்த கதிர், தனது தேவைகளுக்காக சுயமாக வேலை பார்த்து பணம் சமர்ப்பிக்க தொடங்கினார். தற்போது தீடிரென பாண்டியனிடம் பணத்தை நீட்டிய கதிர், அன்று போல மீண்டும் எந்த ஒரு பிரச்சனை வர கூடாது, எங்களுக்கான பணத்தை நாங்கள் தருகிறோம் என்றார், கதிர்.


Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+