X
முகப்பு சினி தரவரிசை

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் வில்லனே குடும்பத்தை சேர்த்து வச்சுட்டாரு, ரசிகர்கள் குஷி

Author Sakthi Harinath | Published: Wednesday, August 23, 2023, 02:37 PM [IST]

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் வில்லனே குடும்பத்தை சேர்த்து வச்சுட்டாரு, ரசிகர்கள் குஷி. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபல சீரியல் தொடரான பாண்டியன் ஸ்டோர்ஸ் தமிழ் சீரியலில் நடக்கும் சுவாரஸ்ய தகவல்கள் இங்கு உள்ளன. இந்த பட்டியலில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் இந்த வார ப்ரோமோ அப்டேட் மற்றும் இனி நடக்கவிருக்கும் கதைக்களம் பற்றிய முழு தகவல்கள் உள்ளன. இதோ.


cover image
பாண்டியன் ஸ்டோர்ஸ்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபல மெகா தொடர் சீரியல், பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் பல சுவாரஸ்யங்கள் மற்றும் பிரச்சனைகள் தொடர்ந்து எழுந்து வந்துள்ள நிலையில் TRP மற்றும் ரேட்டிங் என பல இடங்களில் இந்த சீரியல் பெரிய அளவில் புகழ் பெற்றுள்ளது. தற்போது இந்த சீரியலில் நடக்கும் கதைக்களம் பற்றிய முழு விவரங்கள் இங்கு உள்ளன.


இதுவரை

தனது குடும்பத்தினருக்கு தெரியாமல் தனம், முல்லை மற்றும் மீனா தனியாக வேறு ஒரு இடத்திற்கு சென்று தனத்தின் அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்று வந்துள்ளனர். இதனை அறிந்த கதிர் முதலில் கோவப்பட்டாலும் பின் சரியாகி இவர்களுக்கு உறுதுணையாக மாறி பிரச்சனையை சமாளித்துள்ளார்.

தனலட்சுமி இல்லம்

பாண்டியன் ஸ்டோர்ஸ் கட்டிய புதிய இல்லத்திற்கு 'தனலட்சுமி இல்லம்' என்று பெயர் வைத்துள்ளார், மூர்த்தி மற்றும் மற்ற குடும்பத்தினர். இதனை கண்டதும் பலரும் ஆச்சரியமும் மற்றும் சிலருக்கு எரிச்சல்கள் உண்டாகின. இருப்பினும் இந்த புதுமனை புகுவிழாவில் எந்த பிரச்சனையும் வரக்கூடாது என்று பல விஷயங்களில் கவனமாக இருக்கிறார்கள், பாண்டியன் குடும்பத்தினர்.

ஜனார்த்தனன் ரகளை

விசேஷ வீட்டில் மது அரிந்துவிட்டு தனது ரகளை ஆரம்பித்துள்ளனர், ஜனார்த்தனன் மற்றும் அவரின் இளைய மருமகன். மார்க்கெட்டிங் என்று சொல்லி பணம் பறிக்கும் மோசடியான தொழில் பற்றி இளைய மருமகன் கூறுவதை அப்படியே நம்புகிறார், ஜனார்த்தனன். இவர்கள் மது அரிந்துவிட்டு விசேஷ வீட்டில் தங்களின் வியாபாரத்தை பற்றி பேசியதும், இது ஏமாத்து வேலை என பலர் புறக்கணிக்கிறார்கள். இதனால் ஆத்திரம் அடைந்த இளைய மருமகன், ஜீவாவின் சட்டையை பிடித்து கோபத்தை வெளிப்படுத்துகிறார்.

மூர்த்தியின் அக்கறை

ஜீவா மீது ஒருவர் எப்படி சட்டையை பிடித்து கேள்வி கேட்கலாம் என பொங்கி எழும் மூர்த்தி ஜனார்த்தனன் முன்பு அவரது இளைய மருமகனை தாக்குகிறார். ஜனார்த்தனன் தனது இளைய மருமகனுக்கே முழு ஆதரவு அளித்து பேச பிரச்சனை பெரிய அளவில் உருவாகிறது. இதனால் மீண்டும் ஜீவா பாண்டியன் ஸ்டோர்ஸ் இல்லத்திற்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மது அரிந்துவிட்டு தனக்கே தெரியாமல் ஜனார்த்தனன் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தை சேர்த்து வைத்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+