X
முகப்பு சினி தரவரிசை

பாண்டியன் ஸ்ட்ரோஸ்: ஜெயிலுக்கு சென்ற கண்ணன், ஐஷு-ற்கு பெண் குழந்தை பிறந்தாச்சு

Author Sakthi Harinath | Published: Thursday, July 13, 2023, 12:48 PM [IST]

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தமிழ் தொலைக்காட்சியில் தொடர்களில் பல ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்படும் மெகா தொடர் சீரியல். கூட்டுக்குடும்பம் என இந்த தொடரில் இடம்பெற்றுள்ள கதாபாத்திரங்கள் மக்களின் கவனத்தை கவர்ந்து பிரபலமாகியுள்ளது. இந்த சீரியலின் ஸ்பெஷல் ப்ரோமோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பேசப்படுகிறது, இதனை பற்றிய முழு விவரங்கள் இதோ.


cover image
பாண்டியன் ஸ்டோர்ஸ்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல மெகா தொடர் சீரியல், பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலின் நடக்கும் சுவாரஸ்ய கதைகள் மக்கள் மத்தியில் பெரிய அளவில் ட்ரெண்டிங் ஆகியுள்ளது. இணையதளம் மற்றும் தொலைக்காட்சி என இந்த சீரியலுக்கு மக்களின் ஆதரவு பெரிய அளவில் உள்ளன. கூட்டு குடும்ப கதை மற்றும் அண்ணன் தம்பி பாசம் என இந்த சீரியல் பலரின் கவனத்தை கவர்ந்து கொண்டாடப்படுகிறது.

 

இதுவரை

கந்துவட்டிக்கு கடன் வாங்கி செலவு செய்த கண்ணன் & ஐஸ்வர்யா பெரும் இன்னலை கடந்து தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் இல்லத்திற்கு திரும்பு உள்ளனர். இருப்பினும் கந்து வட்டிக்கு வாங்கிய கடனை சமாளிக்க தனது அலுவலகத்தில் லஞ்சம் வாங்கி அதனை சமாளித்து வருகிறார், கண்ணன். ஒருவழியாக தனத்திற்கு இந்த விஷயங்கள் தெரிந்ததும் இந்த பிரச்னைகளை முடித்து வைத்துள்ளார் தனம்.

 

சிக்கிய கண்ணன்

தனது அலுவலகத்தில் லஞ்சம் வாங்குவதாக சொல்லி தனது மேலாளரை மாட்டிவிட்ட கண்ணன், அவரை பணியிடம் நீக்கி விட்டு அதே அலுவலகத்தில் கண்ணன் லஞ்சம் வாங்க தொடங்கிவிட்டார். தற்போது கண்ணனால் வெளியேறிய மேலாளர் மீண்டும் அதே அலுவலகத்திற்கு பணிக்கு வந்ததும், கண்ணன் லஞ்சம் வாங்குவதை கண்டு அதிர்ச்சி அடைகிறார்.

 

தன்னை மாட்டிவிட்ட கண்ணனை பழிவாங்க மேலாளர் கண்ணனை மாட்டி விடுகிறார். இதனால் கண்ணன் லஞ்சம் தடுப்பு பிரிவு அதிகர்களால் கைது செய்யப்படுகிறார். இதனை அறிந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் மீண்டும் இன்னலை சந்திக்கிறது.

அதிர்ச்சியில் ஐஸ்வர்யா

கண்ணன் ஜெயிலுக்கு சென்றதை அறிந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் இந்த பிரச்சனையில் இருந்து கண்ணனை விடுவிக்க சில முயற்சிகள் செய்து வருகிறது. இருப்பினும் கண்ணனின் அலுவலக இடத்தில் இருந்து லஞ்ச பணத்தை எடுத்ததாக சொல்லி, கண்ணனை விடுவிக்க மறுத்துள்ளனர், காவலர்கள்.

 

கண்ணனை நிச்சியம் வீட்டிற்கு அழைத்து வருவார்கள் என எதிர்பார்த்த ஐஸ்வர்யா-வுக்கு கண்ணனை விடுவிக்க முடியவில்லை என்று கூறியதும் அதிர்ச்சி அடைந்துள்ளார் ஐஸ்வர்யா.

பெண் குழந்தை

கண்ணனின் நிலையை அறிந்து அதிர்ச்சி அடைத்த ஐஸ்வர்யாவுக்கு தீடிரென வயிற்று வலி ஆரம்பமாக தொடங்க, இவரை அவசரமாக மருத்துவமனையில் அனுமதிக்கின்றனர், குடும்பத்தினர். கண்ணன் - ஐஸ்வர்யாவுக்கு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறக்கிறது. இந்தனை அறிந்த குடும்பத்தினர் பெரும் சந்தோசத்தில் உள்ள நிலையில், லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக கண்ணன் ஜெயிலுக்கு சென்றதை நினைத்து கவலையில் வாடுகிறார், ஐஸ்வர்யா. இவருக்கு பக்கபலமாக இருப்போம் என நம்பிக்கை தருகிறார்கள், பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+