X
முகப்பு சினி தரவரிசை

பாண்டியன் ஸ்டோர்ஸ்: அதிகாரிகளிடம் வசமாக மாட்டிய கண்ணன், இந்த முறை அடி பெருசு தான்

Author Sakthi Harinath | Published: Tuesday, July 11, 2023, 10:44 AM [IST]

பாண்டியன் ஸ்டோர்ஸ்: அதிகாரிகளிடம் வசமாக மாட்டிய கண்ணன், இந்த முறை அடி பெருசு தான், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் இந்த வாரா ப்ரோமோ அப்டேட் மற்றும் சுவாரஸ்ய தகவல்கள் இங்கு உள்ளன. பரப்பரப்பிற்கு பஞ்சம் இல்லாமல் தொடர்ந்து பல பிரச்சனைகளில் உருவாகி மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல். இந்த சீரியலின் இந்த வார ப்ரோமோ அடிப்படையில் வெளியான சுவாரஸ்யங்களை பற்றி இங்கு காணலாம். இதோ.


cover image
பாண்டியன் ஸ்டோர்ஸ்

தமிழ் சின்னத்திரையில் இல்லத்தரசிகளின் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்றுள்ள தொலைக்காட்சி தொடர்,பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தமிழில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த சீரியலின் கதையில் எப்பொழுதும் பரபரப்பிற்கு பஞ்சம் இல்லாமல் பல சுவாரஸ்யங்களை உள்ளடக்கி சிறந்த முறையில் உருவாக்கி மக்களின் கவனத்தை ஈர்த்துளனர், குழுவினர். இந்த சீரியலின் இந்த வார ப்ரோமோ அப்டேட் மற்றும் சுவாரஸ்ய தகவல்கள் இங்கு காணலாம்.

இதுவரை

தனத்தின் உடல்நலம் பற்றி திடுக்கிடும் செய்திகள் வர, அவசரமாக கண்ணன் - ஐஸ்வர்யாவின் சீமந்தத்தை நடத்தி வைத்தார், தனம். இதற்கிடையில் கண்ணன் - ஐஸ்வர்யா வட்டிக்கு கடன் வாங்கியதை பற்றி அறியும் முல்லை, தனத்திடம் சொல்ல புதிய பிரச்சனை வீட்டில் உதயமாகிறது. இந்நிலையில் கண்ணனால் வேலை விட்டு போன உயர் அதிகாரி மீண்டும் அதே அலுவலகத்திற்கு பணிக்கு வருகிறார்.

இந்த வார ப்ரோமோ

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் இந்த வார ப்ரோமோவில் கண்ணன் லஞ்சம் வாங்கிக்கொண்டு லோன் கொடுப்பதை அறியும் மேலாளர், கண்ணனை மாட்டி விட திட்டம் செய்கிறார். கண்ணன் லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக வங்கி மேலாளரை மாட்டி விட்ட நிலையில், தற்போது அதே அதிகாரி கண்ணனை மாட்டி விட்டு தனது பகையை தீர்த்து கொள்கிறார். கண்ணன் அதிகாரிகளிடம் மாட்டும் வீடியோ செய்தியாக வெளியாகி குடும்பத்தினர் மத்தியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

ஐஸ்வர்யா

ஐஸ்வர்யா - கண்ணனின் திருமணத்தில் இருந்து தற்போது வரை பிரச்சனைகளை மட்டுமே செய்து வருகின்றனர். வீட்டைவிட்டு சென்று திருமணம் செய்து தனது தாயின் உயிரை எடுத்தது முதல், திருட்டு, கிரெடிட் கார்டு கடன், கந்துவட்டி கடன், வீடியோ, பொய் விவகாரத்தில் மாற்றி செய்து கலவரம் ஏற்படுத்தியது என பல விஷயங்களில் இவர்கள் தொடர்ந்து பிரச்சனைகள் செய்து பாண்டியன் ஸ்டோர்ஸ் குடுபத்திற்கு தலை குனிவை ஏற்படுத்தி வருகின்றனர். இந்த முறை லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக கண்ணன் கைது ஆனது குடும்பத்தை பெரிய அளவில் பாதிக்கும் என ரசிகர்கள் சோகம்.

இனி

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இனி கண்ணனை காவல் நிலையத்தில் இருந்து காப்பாற்றுவது போன்ற விஷயங்கள் தான் நடக்கும். இதற்கிடையில் தனத்தின் உடல்நலம் பற்றி மூர்த்தி மற்றும் மற்ற குடும்பத்தினருக்கும் தெரியவருமா என்ற எதிர்பார்ப்புகளும் உள்ளன. ஒரே நேரத்தில் தனத்தின் உடல் நலம், கண்ணன் செய்த தவறு என பல விஷயங்களை நடந்தால் பெரிய அளவில் இந்த குடும்பம் பாதிக்கப்படும் என பாண்டியன் ஸ்டோர்ஸ் ரசிகர்கள் அச்சம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+